முகப்பு


193. அடைக்கலப் பாறையான இயேசுவே
அடைக்கலப் பாறையான இயேசுவே
அரணும் கோட்டையும் ஆன இயேசுவே - 2
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசய்யா - 2

1. தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே - 2
பிறப்பிலும் வாழ்விலும் நீயே எனக்கு
ஆதாரம் நீயல்லவோ - எந்தன் - 2

2. போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் - 2
உயரமான இடத்திலே என்னை நிறுத்தி
மாண்புறச் செய்கின்றீரே - என்னை - 2
194. அருமை அருமை வான்படைகளின்
அருமை அருமை வான்படைகளின்
இறைவன் வாழும் இல்லம் அருமை - 2

1. அழகு முற்றங்கள் அங்கு ஆயிரம் உண்டு
அத்தனையும் காண அருமை
தங்குது அங்கே சின்ன சின்ன குருவிகள்
ஏங்குது மனமே அதைக் கண்டு - 2
எந்த நேரமும் அந்தக் குருவிபோல் - உன்
சன்னிதி வாழும் அருள் நிலையே வேண்டும் - 2
எனது ஆத்மா கொண்ட தாகம் தாகம் இது

2. ஆவல் கொள்கிறேன் உன் அழகு வாயிலில்
காவல் காக்கவே தினமும் அருமை
அரண்மனை வாழ்க்கை ஆயிரம் நாளானாலும்
ஆலயத்தில் ஒருநாள் போல் இல்லை - 2
எந்த நேரமும் அந்தக் குருவிபோல் - உன்
சன்னிதி வாழும் - அருள் நிலையே வேண்டும் - 2
எனது ஆத்மா கொண்ட தாகம் தாகம் இது
195. அன்பு நிறைந்த ஆயனாய் இறைவன் என்னை வழிநடத்த
அன்பு நிறைந்த ஆயனாய் இறைவன் என்னை வழிநடத்த
என்றும் வாழ்வில் இன்பமே குறைகள் எனக்கு இல்லையே - 2

1. பசும்புல்நிறைந்தபூமியில்எந்தன் பசியைஆற்றச் செய்கின்றார்- 2
அமைதி நிறை நீர்நிலைகளுக்கு - 2
என்னை அழைத்துச் செல்கின்றார்
எனக்குப் புத்துயிர் அளிக்கின்றார்

2. எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை
ஏற்பாடு செய்கின்றார் - 2 எனது தலையில் ஆவியின் - 2
நறுமணத் தைலம் பூசுகின்றார்
நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குதம்மா
196. அனைத்து உயிர்களே ஆண்டவரைப் புகழ்ந்து பாடிடுங்கள்
அனைத்து உயிர்களே ஆண்டவரைப் புகழ்ந்து பாடிடுங்கள்

1. தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்
வலிமைமிகு விண்விரிவில் போற்றுங்கள்
அவர்தம் வல்ல செயல்களுக்காய்
அவர்தம் எல்லையில்லா மாண்பினைக் குறித்து
அவரைப் போற்றுங்கள் - 2

2. எக்காளம் முழங்கியே போற்றுங்கள்
வீணையுடன் யாழிசைத்துப் போற்றுங்கள்
மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து
சிலம்பும் சலங்கையுடன் குழலினை ஊதி
அவரைப் போற்றுங்கள் - 2
197. ஆண்டவர் எத்துணை இனியவர் என்று
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்

1. ஆண்டவரை நான் எக்காலமும் போற்றிடுவேன் போற்றிடுவேன்
அவரது புகழ் எப்பொழுதும் எனது நாவில் ஒலித்திடுமே
நான் ஆண்டவரைப் பெருமையாகப் பேசுவேன் - 2
எளியோர் இதைக்கேட்டு அகமகிழ்வர் மகிழ்ச்சி கொள்வர்

2. என்னோடு ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்
அவரது பெயரை மேன்மைப் படுத்துவோம்
நான் துணை வேண்டி ஆண்டவரை மன்றாடினேன் - 2
அவர் எனக்கு மறுமொழி தந்தார் மறுமொழி தந்தார்

198. ஆண்டவர் எவ்வளவு நல்லவர் அவரை அணுகி வாருங்கள்
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் அவரை அணுகி வாருங்கள்
ஆண்டவர் எவ்வளவு இனியவர் அவரைச் சுவைத்துப் பாருங்கள்

1. பாவமெதுவும் செய்தவரல்லர் வாயில் வஞ்சகம் வந்ததில்லை
பழித்தவரைப் பழித்ததில்லை பாடுகளில் மிரட்டவில்லை

2. சிலுவைதனில் தம்முடலால் இயேசு நம் பாவங்களைச் சுமந்தாரே
அவருடைய காயங்களால் நாமெல்லாம் சுகமானோம்

3. பாவிகள் நம்மை நேசிக்கின்றார் - நம்
பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கின்றார்
தந்தையாக அணைக்கின்றார் புதுவாழ்வு தருகின்றார்
199. ஆண்டவர் என் ஆயன் எனக்குக் குறையில்லை - 2
ஆண்டவர் என் ஆயன் எனக்குக் குறையில்லை - 2

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கின்றார்
ஆண்டவர் என் ஆயன்
அருவிக்குக் கூட்டிச் செல்கின்றார் ஆண்டவர் என் ஆயன்
எந்தன் களைப்பை ஆற்றுகின்றார் ஆண்டவர் என் ஆயன்
எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார் ஆண்டவர் என் ஆயன்

2. நேரிய வழியில் எனை நடத்திச் செல்கின்றார்
ஆண்டவர் என் ஆயன்
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் ஆண்டவர் என் ஆயன்
நடக்க நேர்ந்தாலும் பயமில்லை ஆண்டவர் என் ஆயன்
ஏனெனில் என்னோடு இருக்கின்றார் ஆண்டவர் என் ஆயன்
200. ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி
ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி
எனக்குக் குறைகள் ஒன்றும் இல்லையே
தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி
தலைவன் பாதையில் செல்லும் என் வழி
ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார்
இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறார் - 2
துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்
உயிராகி என்னைக் காக்கிறார் எல்லாம் எனக்கு ஆயன் அவரே

2. இருளின் பாதையில் நான் நடக்க நேரிடினும்
தீமைகள் எதற்குமே அச்சமில்லையே - 2
அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல் - 2
அவரே என் அருகிருப்பதால் எல்லாம் எனக்கு ஆயன் அவரே
201. ஆண்டவர் என் ஒளி என் மீட்பு அவரிடம் எனதுயிர் பாதுகாப்பு
ஆண்டவர் என் ஒளி என் மீட்பு அவரிடம் எனதுயிர் பாதுகாப்பு
யாருக்கும் நான் அஞ்சத் தேவையில்லை
யாருக்கும் நடுங்கிடத் தேவையில்லை

1. நான் ஒரு வேண்டுதல் செய்து கொண்டேன்
ஆண்டவர் வீட்டினில் இருந்திடவே
அவர் முக தரிசனம் கிடைத்திடவே
அவர் உளம் அறிந்து நான் நடந்திடவே - 2
கேடுகள் வருங்கால் புகலிடம் தருவார்
தம் கூடாரம் உள்ளே தாக்குதல் வேளையில்
தூக்கியே வைப்பார் நேர் உயர் குன்றின் மேலே

2. பூ முகம் பார்த்திட ஏகிடுவேன்
அவர் சினம் விலகிட இறைஞ்சிடுவேன்
பலிகளை உவப்புடன் செலுத்திடுவேன்
கவிதைகள் அமைத்து நான் இசைத்திடுவேன் - 2
அவர் குரல் கேட்பார் அவர் பதிலளிப்பார்
அவரே எனது துணை அன்னையும் தந்தையும்
அகன்றுவிட்டாலும் அவர் கை விடுவதில்லை
202.ஆண்டவர் எனது நல்லாயன்
ஆண்டவர் எனது நல்லாயன்
ஆகவே எனக்குக் குறையுமிறாது - 2

1. பசும்புல் வெளிமீது இனைப்பாற்றுவார் - எனை
குளிர் நீர் நிலைக்கு அழைத்துச் செல்வார்
புத்துயிர் எனக்கு அவர் அளிப்பார் - எனை
நீதியின் வழியில் நடத்திடுவார்

2. பகைவர் கண்முன்னே விருந்தளித்தீர்
நறுமணத் தைலத்தால் எனைப்பூசினிர்
அருளும் அன்பும் சூழ்ந்து வரும் - நான்
உமது இல்லத்தில் வாழ்ந்திருப்பேன்
203. ஆண்டவர் தந்த நாள்களிலெல்லாம்
ஆண்டவர் தந்த நாள்களிலெல்லாம்
வெற்றியின் நாள் இதுவே - இன்று
அகமகிழ்வுடனே அக்களிப்போம் - அது
நீதியும் தகுதியாகும் எனவே மகிழ்ந்து பாடிடுவோம்
இறைவன் நீரே இருப்பவர் நீரே இருளைப் போக்கும் ஒளியும் நீரே
வாழ்வும் நீரே வழியும் நீரே வாழ்வின் உணவாய் வந்தவர் நீரே

1. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
என்றென்றும் உள்ளது அவர் பேரன்பென்று
அவருக்கஞ்சுவோர் சாற்றுவாராக
ஆற்றலாய்த் துணை நிற்கும் வல்லவரே அவர்
அவரைப் போற்றிடுவோம் - 2 நாம் அவரில் நிறைவடைவோம்

2. என் துன்ப வேளையில் அவரை வேண்டினேன்
அவரும் செவி தந்து விடுவித்தார்
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் இருக்க
யாருக்கு நான் நடுங்க வேண்டும்
என் மன்றாட்டை நீர் கேட்டதால் இறைவா
வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் - 2 உமக்கு
வாழ்வாலே நன்றி சொல்வேன்
204. ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
மாண்புயர் வான்மண்டலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

1. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

2. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
நரம்பிசைத்து குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

3. நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
கைத்தாள ஒளி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்
205. ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது
ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது
மதில்போல் சூழந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது
கலங்காதே மனமே கலங்காதே மனமே
அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே

1. உன்னைக் காப்பவர் அயர்வதில்லை
உன் கால் இடற விடுவதில்லை
உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை
உன்னோடு உயிராய் இணைந்திருப்பார் - 2
பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே
புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால் தீமை செய்யாது திகையாதே
கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்
கவலையோ கலக்கமோ இனி வேண்டாம்

2. வானத்துப் பறவையைக் காக்கின்றவர்
வறுமையில் உன்னை விடுவாரோ
வயல்வெளி மலரை மகிழ்விப்பவர்
நோயினில் விடுதலை தருவாரே - 2
உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே
தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கிப் போகாதே
இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன் இன்றும் என்றும் உடனிருப்பார்
206. ஆண்டவரில் அகமகிழ்ந்திடுங்கள் அல்லேலூயா
ஆண்டவரில் அகமகிழ்ந்திடுங்கள் அல்லேலூயா
அவர் பெயரை என்றும் போற்றிடுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2

1. தூதர்களே அவர் படைப்புகளே புகழுங்கள்
வானங்களே குளிர் மேகங்களே புகழுங்கள்
கதிரவனே ஒளிர் மேகங்களே புகழுங்கள்
விண்மீனே ஒளி மின்னல்களே புகழுங்கள் - ஆண்டவரில்

2. மழைத்துளியே கொட்டும் நீர்த் திரளே புகழுங்கள்
சுடும் நெருப்பே கொடும் புயல் காற்றே புகழுங்கள்
பெரும் மலையே உயர் குன்றுகளே புகழுங்கள்
விலங்குகளே மரக்கன்றுகளே புகழுங்கள் - ஆண்டவரில்
207.ஆண்டவரின் உறைவிடம் அருமையானது
ஆண்டவரின் உறைவிடம் அருமையானது
அதைத்தேடி என் ஆன்மா தவிக்கின்றது - 2
உள்ளமும் உடலும் பாடுகின்றது - 2
உன்னதரில் அடைக்கலம் ஆனது ஆஆஆ

1. இறைவனின் இல்லத்திலே இனிதே வாழ்ந்திருப்பேன்
இனிவரும் நாளெல்லாம் புகழ் பாடுவேன்
இறைவன் காத்திடுவார் உறுதியில் தளர்வதில்லை
வலுமிகு கரங்களாலே வழிகாட்டுவார்
வறட்சியான வாழ்க்கையிலே நீரூற்றாய் வருகிறார்
வளமைக்கான அருள்பொழிந்து வழிநடத்திச் செல்கிறார் - 2
வேண்டுதலைக் கேட்கிறார் கனிவுடனே பார்க்கிறார்

2. ஒருநாள் போதுமே திருநாள் ஆகுமே
இறைவனின் இல்லத்தில் தங்கும் நேரமே
இருளும் சாய்ந்திடும் அருளொளி சூழ்ந்திடும்
இறைவனில் என் வாழ்வு இதமாகுமே
வழியும் ஒளியும் வாழ்வுமாகி நடத்திச் செல்லும் தலைவனே
அருளினையும் மேன்மையையும் அளிப்பவரும் இறைவனே - 2
நன்மைகளை வழங்குவார் நம்பும் மனிதர் வாழுவார்
208. ஆண்டவரின் சந்நிதியில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
ஆண்டவரின் சந்நிதியில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
மாண்புமிக்க வான் தளத்தில் அவரைப் புகழ்ந்து ஏத்துங்கள் - 2
விண்ணோர் போற்றும் பரிசுத்தர் உலகை மீட்கும் இரட்சகர் - 2
தையாரே தையர தையா தையாரே - 4

1. எக்காளத்தை ஊதுங்கள் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் - 2
வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து ஏத்துங்கள் - 2
வாருங்களே அவரைப் பாடுங்களே - 2 - ஆண்டவரின்

2. முரசு கொட்டிப் பாடுங்கள் நடனமாடிப் போற்றுங்கள் - 2
இசைமீட்டி குழலூதி அவரைப் புகழ்ந்து ஏத்துங்கள் - 2
வாருங்களே அவரைப் பாடுங்களே - 2 - ஆண்டவரின்
209. ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2
ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2

1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கள கீதங்கள் முழங்கிடுவீர் - 2
அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே

2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம் - 2
துதிப் புகழோடு நுழைந்திடுவோம் தூய அவரது வாசல்களில்
210. ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்
ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவர்இரக்கம் - 2

1. என்றென்றும் உள்ளது அவர் இரக்கம் என்று
ஆண்டவர்க்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக
துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்
ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு
எனக்கு விடுதலை அளித்தார்

2. ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்
எவன் எனக்கு என்ன செய்ய முடியும்
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்
சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன்
211. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்
அவர் வழியில் இன்பம் காண்போர் பேறுபெற்றோர் - 2

1. மனம் இரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மைகள் அடைவார்
தம் அலுவல்களில் நீதியுடன் அவர் செயல்திறன் தருவார் - 2
எந்நாளுமே அவர் அசைவுறார் எல்லார் நெஞ்சிலும் நிறைவார் - 2
தீயதேதும் பயமுறுத்தாது நம்பிடும் இதயம் அசையாது

2. அவர் மரபு பூவுலகில் மிகவே வலியதாய் இருக்கும்
நேர்மையுள்ளோர் தம் தலைமுறை
தலைமுறை ஆசிகள் பெறும் - 2
சொத்து செல்வம் எல்லாம் இல்லம் தங்கும்
என்றென்றுமே அவர் நீதி நிலைக்கும் - 2
இருளினில் ஒளியென விளங்கிடுவார்
அவர் அருளும் இரக்கமும் அடைந்திடுவார்
212. ஆண்டவருக்கு ஆனந்தமாய்ப் புகழ்பாடுங்கள்
ஆண்டவருக்கு ஆனந்தமாய்ப் புகழ்பாடுங்கள்
ஆர்ப்பரித்து அக்களித்து அவரைப் போற்றுங்கள் - 2
வீணை கொண்டு யாழிசைத்து கீதம் பாடுங்கள் - 2
நாதமிகு தாளத்துடன் அவரை வாழ்த்துங்கள்

1. விண்ணுலகும் மண்ணுலகும் களிகூறட்டும்
கடலலையும் வயல்வெளியும் வாழ்த்திப் பாடட்டும் - 2
நிலவுலகை நீதியுடன் ஆட்சி செய்பவர் - 2
பூவுலகில் உண்மையுடன் தீர்ப்பளிப்பாரே இந்தப் - 2

2. உலகெங்கும் வாழ்வோரே இறையைப் பாடுங்கள்
தூயதொரு உள்ளத்துடன் அவரைப் போற்றுங்கள் - 2
மக்களினக் குடும்பங்களே வாழத்திப் பாடுங்கள் - 2
மாட்சிமையின் செயல்களையே எடுத்துச் சொல்லுங்கள் இறை - 2
213. ஆண்டவரே இரக்கமாயிரும் - ஏனெனில்
ஆண்டவரே இரக்கமாயிரும் - ஏனெனில்
நாங்கள் பாவம் செய்தோம் இரக்கமாயிரும் - 2

1. இறைவா உம் இரக்கத்திற்கேற்ப என் மீது இரக்கம் வையும்
உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்களைப் போக்கிவிடும்
நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து
முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்
என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும் - 2

2. தூயதோர் உள்ளத்தை இறைவா நீர் என்னைகத்தே உருவாக்கும்
உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்
உம் திருமுன் இருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்
உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும் - 2
214. ஆண்டவரே உம் பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்
ஆண்டவரே உம் பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும் - 2

1. என் தலைவராகிய கடவுளே
உம் பெயரை முன்னிட்டென்னை மீட்டருளும்
என் தலைவராகிய கடவுளே
உம் இனிமை பொருட்டென்னை மீட்டருளும்
நானோ எளியவன் நானோ வறியவன்
என் இதயம் என்னுள் புண்பட்டது

2. என் ஆண்டவரே என் கடவுளே எனக்கு உதவி அளித்தருளும்
என் ஆண்டவரே என் கடவுளே
உம் பேரன்பின் பொருட்டென்னை மீட்டருளும்
இது உம் ஆற்றலன்றோ இது உம் செயலன்றோ
என்றே அவர்கள் உணர்ந்திடட்டும்
215. ஆண்டவரே உம் பேரன்பு உயர்ந்துள்ளது
ஆண்டவரே உம் பேரன்பு உயர்ந்துள்ளது
முகில்களையே உம் நேர்மை தொடுகின்றது
உமது நீதி மலைகளைப் போல் வளர்ந்துள்ளது
உமது தீர்ப்பு கடல்களைப் போல் ஆழமானது
இறைவா இறைவா இறைவா என் இறைவா

1. சிறகின் நிழலில் புகலிடம் காண்கின்றேன்
கரத்தின் வலிமையை நாளும் உணர்கின்றேன் - 2
உம் இல்லத்தில் என்றும் தங்கி மகிழ்ந்திடுவேன்
உம் இதயத்தின் நிழலில் என்னையே மறந்திருப்பேன்
என் தாகம் தீர்ப்பவரே என் வாழ்வை மீட்பவரே - இறைவா

2. வாழ்வின் ஊற்றால் தாகம் தீர்க்கின்றீர்
உமது ஒளியால் என்னை நிரப்புகின்றீர்
பொல்லார் தீயோர் கரம் நின்று காத்திடுவீர்
உமது நீதியால் என்னை நிறைத்திடுவீர் - என் தாகம்
216. ஆண்டவரே உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக
ஆண்டவரே உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக - 2

1. ஆண்டவர் வாக்கு நேர்மையானவை அவரது செயல்கள்
நம்பிக்கைக்கு உரியவை நீதியை நேர்மையை விரும்புகிறார் - 2
அவரது அன்பால் நிறைந்துள்ளதுலகம்

2. தமக்கு அஞ்சி நடப்போரையும் காத்திருப்போரையும்
கண்நோக்குகின்றார் அவர்கள் உயிரைக் காக்கின்றார் - 2
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்

217. ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன்
ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன்
என் தேவனே உம்மையே புகழ்ந்து பாடுவேன்
மாசற்ற வழியில் நான் நடக்க
என்னுள்ளம் வாருமே - 2 என் ஆண்டவரே

1. வாழ்நாள்கள் புகையெனவே மறைகின்றதே
என்னிதயம் புல்லைப் போல தீய்ந்து போகுதே - 2
என் உணவையும் நான் உண்ண மறந்தேன் - 2
என் மூச்சின் பேரொளியாக என் எலும்பின் சதையுமாக
என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2

2. பாலைவனப் பறவை போல அலைந்து திரிந்தேன்
பாழ்நிலத்தின் மானைப் போல கதறித் தவிக்கிறேன் - 2
நீர் எழுந்தருளி இரக்கம் காட்டுமே - 2
என்னிதயத் துடிப்பாக என் வழியில் ஒளியுமாக
என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2
218. ஆண்டவரே உமதன்பில் குறைவே இல்லையே
ஆண்டவரே உமதன்பில் குறைவே இல்லையே
உந்தன் அன்பில் மகிழ்வேன்
துதிபாடி என்றும் களிப்பேன் - 2
உந்தன் அன்பில் மகிழ்வேன் ( என்றும் ) - 4

1. உனக்காக ஒரு பாடல் இசைத்தேன் தேவனே - 2
சீவனாய் நாதமாய் என்னில் எழுந்திடுவாய் - 2
நீயில்லா வாழ்வில்லை
உணர்ந்தேன் தெய்வமே ( இனி ) - 2 உந்தன்

2. என்மீது அன்பு கொண்ட எந்தன் தேவனே - 2
நேசமாய்த் தாயன்பாய் என்னில் வந்திடுவாய் - 2
இணையில்லா வல்லமையை
உணர்ந்தேன் தெய்வமே ( இனி ) - 2 உந்தன்
219. ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உமக்கே நான் அன்பு செய்கின்றேன் - 2
அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்
அவரே என் கேடயம் வலிமையும் துணையும் - 2

1. என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க
என் அன்பு தேவன் அடைக்கலமானார் - 2
நெருக்கடியில்லாத இடத்திற்கு அழைத்தாரே
நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தாரே

2. வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
வலியையும் நலமாய் ஆக்கினார் அவரே - 2
எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க
எந்நாளும் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக - 2
220. ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே
ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே
என்னைக் காக்கும் இனிய மேய்ப்பனே - 2
உன் அன்பைப் பாடுகிறேன் - 2
நிறைகள் நான் கண்டேன் குறைகள் இனியில்லையே
வசந்தம் நான் கண்டேன் வாழ்வில் பயமில்லையே

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்தீர்
வாழ்வில் வசந்தம் மலர்ந்திடக் கண்டேன்
அமைதியின் நீர்நிலை புத்துயிர் அளித்திட
என்னை அழைத்தீர் நீதியின் வழியினிலே
சாவின் இருளினிலே பள்ளத்தாக்கின் நடுவினிலே - 2
நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் - 2
நீர் என்னில் இருப்பதனால்

2. எதிரிகள் காண விருந்தொன்றைச் செய்தீர்
வளங்கள் வாழ்வில் நிறைந்திடக் கண்டேன்
தலையில் நறுமணத் தைலம் பூசினீர்
என் பாத்திரம் நிரம்பி வழியக் கண்டேன்
உந்தன் பேரன்பிலே அருளும் நலத்தினிலே - 2 நான்
221. ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம்
ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம்
உன்னதமானவரே நீரே என் பாதுகாப்பு - 2

1. என்னையே சார்ந்திருந்தால் உன்னை விடுவிப்பேன் - 2
துன்ப வேளையிலே நான் உன்னைத் தப்புவிப்பேன்

2. தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னை நெருங்காது - 2
செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார்
222. ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
அமர்வதை எழுவதைத் தெரிந்திருந்தீர்
வாழ்க்கை முழுவதும் அறிந்தவர் நீர்
என் நினைவுகள் அனைத்தும் கடந்தவர் நீர்

1. நான் நடப்பதும் படுப்பதும் செல்லும் வழிகளும் நீர்
அறிந்திருந்தென்னைச் சூழ்ந்திருந்தீர் - 2
வானகம் பறந்தாலும் நீர் இருப்பீர்
பாதாளம் பதுங்கினும் உம் கரம் இருக்கும் - 2
கடல்களின் கடையெல்லை
விடியலின் அருள்வேளை இறைவா

2. நான் இருளின் சிறகினில் மறைந்திட விரும்பினும் நீர்
இருளில் ஒளியாய்த் திகழ்கின்றீர் - 2
வாழ்வின் பயணத்தில் ஒளி தீபமே
இனிதே தொடர்கின்றீர் நீர் என்றுமே - 2 கடல்களின்
223. ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீர்
கரங்களில் என்னைப் பொறித்துள்ளீர்
எந்தன் காலமெல்லாம் என்னைக் காணுகின்றீர்

1. நடப்பதும் படுப்பதும் நான் செல்லும் வழிகளும்
எல்லாம் உம் பார்வையிலே
அமர்வதும் எழுவதும் நினைவுகள் முழுவதும்
எல்லாம் உன் கையிலே - 2
என் முன்னும் என் பின்னும் எனைச் சூழும் தேவா - 2
என் உள்ளம் நீ வாருமே - 2

2. வானமே சென்றாலும் பாதாளம் படுத்தாலும்
அங்கே உன் கைவண்ணமே
நினைவில் நான் நின்றாலும் கடல்தாண்டிச் சென்றாலும்
அங்கேயும் உன் சித்தமே - 2
எங்கே நான் சென்றாலும் எதை நான் செய்தாலும் - 2
உன் கைகள் எனைத் தாங்குமே - 2
224. ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்
ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்
உம்மிடம் அடைக்கலம் நான் புகுந்தேன்
என் இதயம் அகமகிழும் களிகூரும்
என்றென்றும் கவலையின்றி இளைப்பாறும் - 2

1. நீரே என் ஆண்டவர் என்றுரைத்தேன்
உம்மையன்றி எனக்கு வேறு நன்மை இல்லை - 2
ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து - 2
அவர் தாமே எனது மீட்பின் கிண்ணம் - 2

2. மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்குப் பங்கு கிடைத்தது
என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியாயிற்று - 2
அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் - 2
இரவில் கூட என்னிதயம் பாடிடுமே - 2
225. ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு
ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு
எனக்கு பயமில்லை எதற்கும் பயமில்லை

1. எனக்கெதிராய்ப் பகைவர்களும் எதிரிகளும் எழுந்தாலும்
என் பாதை முழுவதுமே இருளினிலே மூழ்கினாலும்
என் உயிர் காப்பவராய் என் இயேசு இருப்பதனால்
எனக்கு அச்சமில்லை எதற்கும் நடுக்கமில்லை

2. எதிரிகளின் நடுவினிலே எனை மேன்மை பெறச் செய்வார்
எனை அணைத்துத் தாலாட்டி என் தேவன் தேற்றிடுவார்
எனது வலப்புறத்தில் என் மீட்பர் இருக்கையிலே
எனக்குக் கலக்கம் இல்லை எதற்கும் பதற்றமில்லை
227.ஆண்டவரே தலைமுறை தலைமுறையாக
ஆண்டவரே தலைமுறை தலைமுறையாக
நீரே எங்களுக்குப் புகலிடம் - 2

1. மலைகள் தோன்று முன்பே பூமியும் உலகுமுண்டாகு முன்பே - 2
ஊழி ஊழிக் காலமாக இறைவா நீர் இருக்கின்றீர் - 2

2. வைகறைக்கனவினைப் போலவாடிடவளர்ந்திடும்பூண்டினைப் போல்
மூச்சுபோல முடிந்து விட்டோம் இறைவா எங்களைக் காத்திடுவீர்
228. ஆண்டவரை அகமகிழ்ந்து போற்றுங்கள்
ஆண்டவரை அகமகிழ்ந்து போற்றுங்கள்
என்றென்றும் அவர் பெயரைப் பாடுங்கள் - 2
நாம் போற்றவும் புகழவும் தகுதியானவர் - 2

1. அவர் மாட்சியுள்ள திருநாமத்தைப் போற்றுங்கள்
அவர் மகிமையுள்ள ஆலயத்தில் போற்றுங்கள் - 2
என்றென்றும் எல்லோர்க்கும் மேலாக வாழ்த்துங்கள்
ஆண்டவரைப் போற்றுங்கள் - 2 தினம்
அவர் அரசின் அரியணைமேல் ஆண்டவரைப் போற்றுங்கள்
படைப்பு அனைத்தும் படைத்த தேவன் புகழைப் பாடுங்கள்
மகிமை மாண்பு கொண்ட தேவன் புகழைப் பாடுங்கள் - 2

2. வானம் காற்றும் மலையும் உம்மை வாழ்த்தட்டும்
ஆறுகளே குன்றுகளே போற்றட்டும்
ஆண்டவரின் எல்லாவித படைப்புகளே
வாழத்துங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள் - 2 தினம்
229. ஆண்டவரைஎனதுஉள்ளம்போற்றிப்புகழ்ந்துமகிழ்கின்றது
ஆண்டவரைஎனதுஉள்ளம்போற்றிப்புகழ்ந்துமகிழ்கின்றது - 2
என் மீட்பராம் கடவுளை நினைந்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது - 2
ஒளியும் வழியும் எழிலே போற்றி போற்றி
இறையே அருளே கனிவே போற்றி போற்றி
திருவே நிறைவே உயர்வே போற்றி போற்றி
உயிரே உறவே இறையே போற்றி போற்றி - ஆண்டவரை

1. ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலையைக்
கனிவுடன் கண்ணோக்கினார்
இதுமுதல் எல்லாத் தலைமுறைதோறும்
எனைப் பேறுபெற்றவர் என்பார்
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு
அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் - 2
தூயவர் என்பதே அவர் பெயராம் - 2 ஒளியும்

2. இறைவனைப் பணிந்து நடப்போர் மீது
தலைமுறையாய் இரக்கம் காட்டினார்
அவர்தம் தோள்வலிமை எத்துணைப் பெரிது
செருக்குற்றோரைச் சிதறடித்தார்
தாழ்நிலை இருப்போரை வானுயர உயர்த்தி
செல்வரை வெறும் கையராக்கினார் - 2
பசிப்பிணி இல்லா வாழ்வு தந்தார் - 2 ஒளியும்
230. ஆண்டவரைத் துதித்தே ஏத்துங்கள்
ஆண்டவரைத் துதித்தே ஏத்துங்கள்

1. மண்ணில் இடம் பெறும் இறை ஆலயத்தில்
விண்ணில் நிலைகொள்ளும் இறைவனின் இல்லத்தில்

2. கண்டு வியக்கின்ற இறைவனின் செயல்களுக்காய்
எண்ணம் கடந்திட்ட இறைவனின் பெருமைக்காய்

3. எக்காளத் தொனியோடு மத்தள நாதமும் முழங்கிடவே

4. யாழோடும் தீங்குழலோடும் மெல்லிசைக் கருவிகள் மீட்டியே
231. ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்
ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்
அவர் துணையைத் தினம் நாடுகிறேன் - 2
ஆண்டவர் தாமே என் வலிமை - 2 அவரே எனது அருட்துணையாம்
ஆதி அந்தமாய் வாழும் தேவனின் புகழினைப் பாடிடுவேன்
நாளும் பொழுதெனை வாழச் செய்திடும்
அன்பரைப் போற்றிடுவேன்

1. உடலும் உயிரும் தளர்ந்திட்ட போதும்
உமது பேரன்பில் உளமகிழ்வேன்
எனது துன்பம் அறிந்திருக்கின்றீர் - 2
எதிரியின் கையில் நின்று எனைக் காப்பீர் - ஆதி அந்தமாய்

2. கலங்கி அழுது கதறும் வேளையும்
கடவுளே உனதருள் கெஞ்சி நின்றேன்
என் குரல் கேட்டீர் அரவணைத்தீர் - 2
ஏழை என் விழிநீர் துடைத்துவிட்டீர் - ஆதி அந்தமாய்
232. ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - 2

1. ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் - 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக - 2

2. ஆண்டவரை நம்பி வாழ்வோரைச் சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் - 2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - 2 என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று
233. ஆண்டவரைப் பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள்
ஆண்டவரைப் பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள்

1.. மகத்துவம் மேன்மை மிகுந்தவர் அவரே
மாந்தரை ஆளும் அரசரும் அவரே
இகத்தில் அவர் போல் தெய்வங்கள் இல்லை
எனவே அவரை வாழ்த்துங்கள்

2. வயல்வெளி மலர்கள் தேன் மழை பொழிய
வானத்துப் பறவைகள் கானங்கள் இசைக்க
நலமுடன் கடல் மீன் இறைவனைப் புகழ
நானில மாந்தரே வாழ்த்துங்கள்
234.ஆண்டவரைப்பாடுவதுநன்றுஉன்னதரைப்புகழ்வதுநன்று - 2
ஆண்டவரைப்பாடுவதுநன்றுஉன்னதரைப்புகழ்வதுநன்று - 2
உமக்கு நன்றி உரைப்பது நன்று
உம்மை நினைந்து மகிழ்வது நன்று - 2

1. காலையிலே உம் பேரன்பையும்
இரவினிலே வாக்குப் பிறழாமையும்
வீணையோடும் இசைக் கருவியோடும் எடுத்துரைப்பது நன்று
வியத்தகு உம் செயலால் என்னை மகிழ்விக்கின்றீர் - 2
வலிமை மிகும் உம் செயல்களை மகிழ்ந்து பாடிடுவேன்

2. தீமை செய்வோர் அனைவரையும் உம் கரத்தால் சிதறடித்தீர்
புது எண்ணெய் என் மீது நிதம் பொழிந்து வலிமை தந்தீர்
ஆண்டவர் இல்லத்திலே நடப்படும் மரங்களைப் போல் - 2
செழித்திடுவேன் கனி தருவேன் பசுமையாய் என்றும் இருப்பேன்
235. ஆண்டவரைப் புகழ்வது நல்லது
ஆண்டவரைப் புகழ்வது நல்லது
அவர் பெயரைப் பாடுவது நல்லது நல்லது
ஆண்டவரைப் புகழ்வது நல்லது

1. ஆண்டவரைப் புகழ்வது நல்லது
உன்னதமானவரே உம் திருப்பெயருக்குப் புகழ்பாடுவது நல்லது
காலையில் உம் இரக்கத்தையும்
இரவெல்லாம் உம் பிரமாணிக்கத்தையும் எடுத்துரைப்பது நல்லது

2. பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும்
யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது
ஏனெனில் ஆண்டவரே உம் செயல்களால்
எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர்
உம் திருக்கரப் படைப்புகளைக் குறித்து நான் அக்களிக்கிறேன்
236. ஆடும் திரைகடலே உன்னை ஆடிடச் சொல்வது யார்
ஆடும் திரைகடலே உன்னை ஆடிடச் சொல்வது யார்
ஓடும் ஆறுகளே நீங்கள் ஓதும் பெயரது யார்
ஆழமும் அகலமுமே இல்லா ஆண்டவன் பெயராமே
அவர்தம் ஆற்றலும் பெரிதாமே

1. சுழலும் காற்றுகளே உங்கள் சீற்றம் யாராலே
வீசும் தென்றல்களே நீங்கள் பேசும் மொழி யாதோ
ஆக்கவும் அழிக்கவுமே வல்ல ஆவியின் செயல்தாமே
அதுவும் ஆண்டவர் இயல்பாமே

2. பாடும் பறவைகளே உங்கள் புகழின் நாயகர் யார்
கானக் குயிலினமே உங்கள் கானத் தலைவர் யார்
அன்பிலே இணைந்திடவே அழைக்கும் ஆண்டவன் குரலாவோம்
அவர்தம் அமைதியின் தூதராவோம்

3. இடிமின்னல் ஓசைகளே உங்கள் முழக்கத்தின் பொருள் என்ன
அதிர்ந்திடும் பூமிகளே நீங்கள் அறிவிக்கும் செய்தி என்ன
புதியதோர் வானகமும் புதிய பூமியும் வந்திடுமே
இறைவன் ஆட்சியும் மலர்ந்திடுமே
238. ஆயர் என் ஆண்டவர் ஆதலின் குறையில்லை - 2
ஆயர் என் ஆண்டவர் ஆதலின் குறையில்லை - 2
பசும்புல் வெளிமீதென்னை ஓய்வு கொள்ளச் செய்கின்றார் - 2
அமைதியான நீர் நிலை தேர்ந்து அழைத்துச் செல்கின்றார் - 2
புத்துயிர் அளிப்பார் - நெஞ்சில் தெம்புகள் தருவார்
தன் பெயர் பொருட்டு நீதி நெறி வழி அமைப்பார்

1. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலே நான் நடக்க நேரிடினும் - என்
துணையாக நீரே இருப்பதால் தீது எதற்கும் அஞ்சிடேன்
உன் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றிடும் - வழிப்
பாதைகளை எனக்கு அமைத்துக் கொடுத்திடும் - தீது
குறுக்கீடு செய்தாலும் தகர்ந்திடும்

2. எதிராளி கண்கள் முன்பிலே எனக்கு விருந்து படைக்கின்றீர் - என்
தலைமீது தைலம் பூசினீர் கிண்ணம் நிரம்பச் செய்கின்றீர்
உம் பேரன்பு எனைச் சூழ்ந்து வந்திடும்
உம் அருள் நன்மை எனை நாளும் காத்திடும் - நானும்
நெடுங்காலம் உம் வீட்டில் வாழுவேன்
239. ஆர்ப்பரிப்போம் ஆண்டவரே - 2
ஆர்ப்பரிப்போம் ஆண்டவரே - 2
மீட்பின் பாறை நீயே என்று
எம்மைக் காக்கும் பாறை நீயே என்று - 2

1. பூவுலகின் ஆழ்பகுதி உந்தன் கையிலே - பெரும்
மலைகளின் கொடுமுடியும் உமக்கே சொந்தம் -2
கடலும் உலர்ந்தத் தரையும் உந்தன் கைவேலைகளே
திடமாக எம்மையே படைத்தவர் நீரே - 2

2. மேய்ச்சலில் ஆடுகள் வீழ்ச்சியுறாமல் - அதைக்
காப்பதில் கவனமாக இருப்பதுபோல - 2
பேணிக்காப்பீர் எம்மையே எந்நாளுமே
வாரி வாரி வழங்குகின்ற வள்ளல் நீரே - 2
241. இயேசு எனக்கு அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார் - 2
இயேசு எனக்கு அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார் - 2

1. கடவுள் நம் அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார்
நெருக்கடி நேரத்தில் நமக்கு
உறுதுணையென நன்குக் காட்டியுள்ளார்
ஆகவே வையகமே புரண்டாலும் நாம் அசைய மாட்டோம்
மலைகள் கடல் நடுவிலே விழுந்தாலும் அச்சமில்லை

2. கடல் அலைகள் கொந்தளித்து எழுந்தாலும்
அவற்றின் கொந்தளிப்பால் மலைகள் தடுமாறினாலும்
வான்படைகளின் ஆண்டவர் நம்மோடிருக்கிறார்
யாக்கோபின் இறைவன் நமக்கு அரணாய் உள்ளார்
243. இறைவா உந்தன் பேரன்பையே
இறைவா உந்தன் பேரன்பையே
என்றென்றும் நினைந்து நான் பாடுவேன் - 2
நீரே உண்மை என உணர்ந்து
உள்ளம் மகிழ்ந்து போற்றுவேன் - 2

1. என் ஊழியன் தாவீதைக் கண்டு பிடித்தேன்
என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்
என் கை எப்பொழுதும் அவனோடிருக்கும்
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள் - 2
அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள் - 2
அவரது மாட்சியை எடுத்துக் கூறுங்கள் - 2

2. என் வாக்குப் பிறழாமை அவனோடிருக்கும்
என் பெயரால் அவன் வலிமை உயர்த்திடப்படும்
நீரே என் தந்தை நீரே இறைவன் என் மீட்பின் பாறை என்று
அவன் என்னை அழைத்திடுவான்
விண்ணுலகம் மகிழ்வதாக - 2 மண்ணுலகம் களிகூறுக - 2
கடலும் அதில் நிறைந்த யாவும் முழங்கட்டும் - 2
244. இறைவா உம் இல்லத்திலே தங்கி வாழ்வோர் யார்
இறைவா உம் இல்லத்திலே தங்கி வாழ்வோர் யார்
இறைவா உம் திருமலையில் குடியிருப்போர் யார் - 2

1. மாசற்ற வாழ்க்கை நடத்துபவன் நீதி நியாயத்தில் நிலை நிற்பவன்
இதயத்தில் நேரியவை தியானிப்பவன் - 2

2. நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன்
அயலானுக்குத் தீமை செய்யாதவன்
பிறரைப் பழித்து உரைக்காதவன் - 2

3. தீயோரை இழிவாகக் கருதுபவன்
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்
தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன் - 2
245. இறைவா என் அகம் உயர்த்தி உமை நோக்கினேன் - உம்
இறைவா என் அகம் உயர்த்தி உமை நோக்கினேன் - உம்
பேரன்பின் மேன்மையை நினைந்தருளும் - இறைவா
அருள் கூர்ந்து வழிகாட்டும்

1. உமை நம்பும் யாரும் வெட்கம் அடையாரே - எங்கும்
பகை எண்ணி சூழ்ச்சி செய்வோர் வெட்கம் அடைவாரே
நகைப்பதற்குப் பகைவர் கையில் தள்ளி விடாதேயும் - என்னை
வசைபாடும் தீயோர் நாவில் சிக்க விடாதேயும்
இறைவா உம் பாதைகள் அறிந்துணர்ந்தேன் - 2 நான்
பறைசாற்றும் உண்மை நெறியில் நிறைவு கண்டேன்
உம்மைத் தேடும் என்னில் பாவம் பலவாகினும் - உம்
இரக்கம் கொண்டு எனை மன்னித்து மீட்பைத் தந்தருளும்

2. நல்லவராம் கடவுள் நீர் நேர்மை உள்ளவரே - எங்கும்
எளியோர்க்கும் எல்லார்க்கும் வழிகள் சொல்பவரே
நீரே அடைக்கலம் என்றிருப்போர் நலமாய் வாழ்வாரே - என்றும்
உமக்கு அஞ்சி நடப்போர் உம் உறவில் மகிழ்வாரே
வாய்மை உம் நேர்மை என் அரணாகவே - 2 உம்
தாய்மையை என்றும் நம்பி வாழ்ந்திடுவேன்
உம்மைத் தேடும் என்னில் பாவம் பலவாகினும் - உம்
இரக்கம் கொண்டு எனை மன்னித்து மீட்பைத் தந்தருளும்
246. இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும்
இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும்
யாரைக் கண்டும் பயப்படேன் இனி - 2

1. தீயவர் என்னை எதிர்க்கையில் அவரே இடறிவிழுவார்
எனக்கெதிராய் என்ன நேர்ந்தாலும் என் உள்ளம் அஞ்சாது-2
நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் - 2
யாரைக் கண்டும் பயப்படேன் - இனி - 2

2. துன்பம் வரும் நாளில் என்னைக் கூடாரத்தில் மறைப்பார்
எதிரிகள் நடுவில் என்னைப் பாதுகாப்பாய் வாழச் செய்வார் - 2
நான் வாழ்வோரின் நாட்டில் நலன்களைக் காண்பேன் - 2
யாரைக் கண்டும் பயப்படேன் இனி - 2
247. இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார்
இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார்
அவரைக் கொண்டு நான் வாழ எவரைக் கண்டும் பயமில்லை - 2

1. வாழ்வில்இறைவன் துணையானார்வாழும் எனக்கு உயிரானார்- 2
தீயோர் என்னை வளைத்தாலும் தீமை அணுக விடமாட்டார் - 2

2. தீயோர் படைபோல்சூழ்ந்தாலும் தீராப் பகையைக் கொண்டாலும் - 2
தேவன் அவரைத் திடமாகத் தேடும் எனக்குக் குறையேது - 2

3. ஒன்றேஇறைவா வேண்டுகிறேன் ஒன்றே அடியேன் தேடுகிறேன் - 2
தேவன் உமது திருமுன்னே நாளும் வாழ அருள்வாயே - 2
248. இறைவன் என்னைக் காக்கின்றார்
இறைவன் என்னைக் காக்கின்றார்
குறையொன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சியூட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார்

1. புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் இணைந்த கானான்
அழைத்துச் சென்று கçeப்பை ஆற்றி புத்துயிர் ஊட்டுகிறார்

2. தீமை துன்பம் நெருங்க விடாமல்
அரணும் கோட்டையும் புகலிடமான
வார்த்தையும் கேடயம் கவசமாகக் காத்து வருகின்றார்
249. இறைவனே என்னைக் காக்கின்றார்
இறைவனே என்னைக் காக்கின்றார்
இனியொரு குறையும் எனக்கில்லை
நிறைவழி நோக்கி நடத்திடுவார் நிம்மதியோடு நான் வாழ்வேன் - 2

1. பகலின் வெம்மையில் பயமில்லை
இருளின் நிலவிலும் தீமையில்லை - 2
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
உன் கால் இடற விடுவதில்லை
உன்னதர் என்றும் அயர்வதில்லை - 2

2. இன்றும் என்றும் காப்பவராம்
பயணத்தில் துணையும் அவர் கரமாம் 2
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
தீமையைக் கண்டு நான் அஞ்சேன்
நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2
250. இஸ்ராயேலின் ஆண்டவரே உமது கரம் என்மீது
இஸ்ராயேலின் ஆண்டவரே உமது கரம் என்மீது
இருப்பதனால் தீமைகள் யாவும் அணுகாது
காத்தருளும் ஆண்டவரே - 2

1. பொன்னாலும் வெள்ளி நகையாலும் அன்று
யாபேசை அலங்கரித்தீர்
தேனோடு மாவும் எண்ணெயும் கலந்து
உணவாய்த் தினம் கொடுத்தீர் - 2
வேற்றினத்தார் நடுவினிலே அவரை உயர்த்தி வைத்தீர் - 2

2. மாந்தரின் நடுவில் சிறப்புடன் வாழ்ந்திட என்றும் துணைபுரிந்தீர்
யாபேசை போல நானும் வாழ்ந்திடத் தினமும் தயைபுரிவீர் - 2
வேதனை சோதனை அனைத்தையும் வென்று
வாழ்ந்திட அருள் புரிவீர் - 2
251. உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - 2
அன்பு தேவன் நீ அருகிருக்கையில்
ஆறுதலை அடைந்திடுவேனே
உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே

1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம்
அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம்
நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுக்கலாம்
தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம்
இறைவா நீ என்னைக் கைவிடாய்
துணையாய் நீ என்னுள் உறைந்திடாய்
ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்

2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம்
உரிமை காக்க உழைப்பதனால் உயிரைச் சிதைக்கலாம்
பொதுநலனைப் பேணுவதால் பெயரை இழக்கலாம்
வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம்
இறைவா நீ என்னைக் கைவிடாய்
துணையாய் நீ என்னுள் உறைந்திடாய் - ஆறுதலாய்
252. உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்
உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்
உம்மை ஏத்துவோம் இறைவா - 2

1. இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில் - 2
இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய்

2. எக்காளத் தொனியுடனே நம் இறைவனைப் போற்றுவோம் - 2
மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏத்துவோம் - 2

3. யாழோடும் வீணையோடும் புல்லாங்குழலோடும் - 2
நம் இறைவனைப் போற்றுவோம்
253. உமது அருளையும் நீதியையும்
உமது அருளையும் நீதியையும்
புகழ்ந்து பாடுவேன் ஆண்டவரே உமக்கு கீதம் இசைத்திடுவேன் - 2

1. மாசற்ற வழியினிலே கருத்தாய் நடந்திடுவேன் - 2
தூய இதயத்துடன் உம் இல்லத்தில் வாழ்ந்திடுவேன் - 2
என்றும் நன்றி இதய நன்றி எங்கள் இறைவா உமக்கு நன்றி - 2

2. நம்பிக்கைக்குரியவரை என்னோடு வாழச் செய்வேன் - 2
நேரிய மனத்தோர்க்குப் பணிவிடை புரிந்திடுவேன் - 2 என்றும்
254. உலகெல்லாம் புது உயிர் பெறவே
உலகெல்லாம் புது உயிர் பெறவே
உமது தூய ஆவியை அனுப்புவீர் - 2

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாய்
ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர் - 2
படைப்புகளால் உயர்ந்துள்ளது வையகம்

2. இறைவன் தம் மாட்சிமை விளங்குக
படைப்புகளைக் குறித்து அவர் மகிழுக மகிழுக - 2
ஆண்டவரே என் ஏழ்மைப் புகழுரை இனியதாய் ஆகும்
இறைவனில் நாம் நிறைவாக மகிழுக
255. உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா - 2
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - 2 உந்தன்
கண்களில் இமைபோல் எந்நாளும்
என்னைக்காத்திடு என் இறைவா

1. பாவங்கள் சுமையாய் இருந்தும் - உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் - 2
கருணையின் மழையில் நனைந்தால் - உன்
ஆலயம் புனிதம் அருளும் - 2

2. வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை - 2
வானதன் அருள்மழை பொழிந்தே - நீ
வளர்த்திடு அன்பதன் உறவை - 2
256. உன் துணையான ஆண்டவர் - தம்
உன் துணையான ஆண்டவர் - தம்
கிருபைதனை பொழிந்திடுவார் - உன்னை
விடுவிக்கவும் உன்னைக் காத்திடவும் - 2
அன்பான தேவன் இவர் இருக்க இனி ஏதும் குறையில்லை

1. இலைகள் உதிர்வதனால் மரங்கள் மரிப்பதில்லை
பரமனின் திருவருளால் லலல்ல லலல்லா புதிதாய் வளர்ந்திடுமே
சூரியன் சாய்வதனால் இருளின் வெற்றியல்ல
மீட்பரின் வல்லமையால் லலல்ல லலல்லா புதுநாள் புலர்ந்திடுமே
இயேசுவின் மார்பினிலே எப்போதுமே சாய்ந்திடுமே
மரணமே ஆனாலும் உன் முன்னே மண்டியிடும்

2. உளிகொண்டு அடிப்பதனால் கல்லுக்குத் தோல்வியல்ல
பரமனின் திருவருளால் லலல்ல லலல்லா சிற்பமாய் பிறப்பெடுக்கும்
தேய்பிறை வருவதனால் நிலவின் அழிவு அல்ல
மீட்பரின் வல்லமையால் லலல்ல லலல்லா வளர்பிறை வந்திடுமே
இயேசு ஆண்டவரை எப்போதுமே சார்ந்து இரு
பழையன அழிந்து விடும் புதுவாழ்வு உனைச் சேரும்
257. உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே
உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே
ஊரெல்லாம் உன்னை ஒதுக்கினாலும் உன் தேவன் விலகமாட்டார்
உன் துக்கங்கள் எல்லாம் மாறும் சந்தோஷம் வாழ்வில் கூடும்
துயரங்கள் எல்லாம் மறையும் நெஞ்சினில் நிம்மதி நிறையும்

1. பாலைநிலத்தில் மன்னாவைப் பொழிந்து
ஆண்டவர் உனக்கு நன்மை செய்வார்
அவரின் சமூகம் முன்பாகச் செல்லும்
தீமைகள் உன்னை அணுகாது
இமயம் போல் சூழ்ந்திடும் துயரங்களைப்
பனிபோல் மறைந்திடச் செய்திடுவார்
உலகம் முடியும் வரை உயிருள்ள தேவன் உடனிருப்பார்

2. துணையாக வந்து தோள் மீது சுமந்து
தினந்தோறும் உன்னைப் பாதுகாப்பார்
காரிருள் சூழ்ந்து தடுமாறும் நேரம் கரிசனையோடு ஒளியாவார்
தனிமையில் தவிக்கும் போதினிலே
நம்பிக்கையூட்டி நலம் தருவார்
வாழ்விக்கும் நல்லாயனாய் வல்லமையோடு நடத்திடுவார்
258. உன்னத தேவனவர் நம்மைப்
உன்னத தேவனவர் நம்மைப்
படைத்தவர் ஆள்பவர் ஆண்டவர் அவரே - 2

1. காலையும் மாலையும் கடவுளின் மேன்மை பாடுதல் நல்லதுவே - 2
கனிவுடன் பாடலில்வீணையும் யாழும் - 2 மீட்டிடபாடுதல்நல்லதுவே

2. ஆண்டவர் மாபெரும் செயல்கள்
அனைத்தும் அறிவிலி அறிவதில்லை - 2
பாவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும் - 2
பாவங்கள் அவர்களை விடுவதில்லை

3. மகிழ்வுறும் செய்தியை என் மனம்
குளிர இறைவன் எனக்களித்தார் - 2
மாமரம் கேதுரு போலவே வளர்ந்து - 2
நீதியில் வாழ்ந்திடச் செய்கின்றார்
259. உன்னதரின் பாதுகாப்பில் என்றும் வாழ்பவர்
உன்னதரின் பாதுகாப்பில் என்றும் வாழ்பவர்
வல்லவரின் நிழலிலே தங்கி இருப்பவர் - 2
அவர் ஆண்டவரை நோக்கி உரைக்கிறார்
நீரே எனது புகலிடம் எனது அரணும் கோட்டையும்
நான் நம்பி இருக்கும் நல்ல இறைவன் நீ - 2

1. வேடரின் கண்ணியினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும்
ஆண்டவர்தாமே பாதுகாத்திடுவாரே - 2
அவர்தம் சிறகுகளாலே உம்மை அரவணைப்பாரே
அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்
அவர்தம் உண்மையும் கேடயம் கவசமும் ஆகும்

2. இரவதின் உறை திகிலுக்கும் பகலிலே பாயும் அம்புக்கும்
ஒருபோதுமே நீர் அஞ்சிட மாட்டீர் - 2
இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நீர் அஞ்சவே மாட்டீர்
பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சவே மாட்டீர்
தாக்கும் ஆயிரம் பதினாயிரம்பேர் வெல்லாரே
260. எத்துணை இனியவர் இறைவன் என்று
எத்துணை இனியவர் இறைவன் என்று
ரசித்து ருசித்து பாருங்கள்
அவரிடம் அடைக்கலம் புகுந்தவர் மகிழ்வார்
அடைகின்ற பேறுகள் கணக்கிட அறியார்

1. காலமெல்லாம் நான் போற்றல் செய்வேன்
நேரமெல்லாம் புகழ் நாவில் ஒலிப்பேன்
எல்லார் முன்பும் அவர் பெருமை சொல்வேன் - 2
எளியோரும் இதைக் கேட்டு உளம் பூரிப்பார் - 2

2. கண்ணோக்கிப் பார்த்தோர் உள்ளம் பூத்தார்
வெட்கக்கேடே இல்லா வாழ்வு அடைந்தார்
ஏழை கூவும் சத்தம் செவியில் ஏற்றார் - 2
இடர் நீக்கி பாவம் போக்கிக் கடைத்தேற்றினார் - 2
261. எத்துணை நன்று எத்துணை நன்று
எத்துணை நன்று எத்துணை நன்று
அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது எத்துணை நன்று - 2

1. ஒரு கொடிக் கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று
அந்த ஒரே திருஅவையில் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று - 2
ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று
இன்றுஒரேவிதஅழைப்பைநாம்பெற்றுக்கொண்டோம்எத்துணைநன்று

2. புதியதோர் உலகம் கண்டிடுவோமே எத்துணை நன்று
அதில் புதியதோர் வாழ்வை அடைந்திடுவோமே எத்துணை நன்று - 2
பிரிவினை எல்லாம் தீர்த்திடுவோமே எத்துணை நன்று
இன்று இறைவனில் ஒன்றாய் இணைந்திடுவோமே
எத்துணை நன்று
262. என் ஆத்துமம் ஆண்டவரைப் புகழ்கின்ற வேளையிது - என்
என் ஆத்துமம் ஆண்டவரைப் புகழ்கின்ற வேளையிது - என்
ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது - 2

1. அன்பின் தேவனவர் தினம் அவர் குரல் கேட்டிடுவேன்
இரக்கத்தின் கடவுளவர் அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன் - 2
அவரருகினிலே நான் இருப்பேன் - தினம்
அவர் வழி தனிலே நான் நடப்பேன் - 2

2. நீதியின் மன்னரவர் அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன்
மகிழ்ச்சியின் நிறைவுமவர் என்
மனத்தினை மீட்டிடுவேன் - 2 அவர்
263. என் ஆதாரம் நீயாகியே உன் பேரன்பில் எனைத் தேற்றுமே
என் ஆதாரம் நீயாகியே உன் பேரன்பில் எனைத் தேற்றுமே
கற்பாறை போல் துணையாகியே என் கரம் பற்றி வழிநடத்துமே
உனை நம்பியே உயிர் வாழ்கிறேன் இறை உன்னில் சரணாகிறேன்- 2

1. துயரங்கள் சூழத் தளர்ந்திடும் வேளை
வருத்தங்கள் நீக்கி வலிமையைத் தந்தாய்
உடைந்திட்ட கலமாய் வதைபட்ட போதும்
உன் முக ஒளியால் ஆறுதல் ஈந்தாய்
எப்போதும் பேரச்சம் சூழ்ந்தாலுமே
என்றென்றும் நம்பிக்கை உன் மீதிலே
போற்றுவேன் நான் போற்றுவேன் போற்றியே தினம் வாழுவேன்
என் நினைவெல்லாம் அதுதானய்யா - 2

2. மலையெனப் பகைவர் எழுந்து வந்தாலும்
மறைப்பினும் வைத்துக் காத்திடுகின்றீர்
நேரிய மனத்தோர் நன்மைகள் அடைந்திட
காவலாய் இருப்பீர் கருணையில் அணைப்பீர்
இறுமாப்பில் நடப்போர்க்குப் பதில் கொடுக்கின்றீர்
இறைவா உம் அடியோர்க்குப் பலம் தருகின்றீர் - போற்றுவேன்
264. என் ஆயன் இயேசிருக்க அவர் பாதம் நான் இருக்க
என் ஆயன் இயேசிருக்க அவர் பாதம் நான் இருக்க
எதிரிகளும் எனை வெல்வாரோ
எந்தத் தீமைகளும் எனை வீழ்த்திடுமோ - 2

1. வழிதவறி நான் அலைந்தேன் வாழும் வழி நான் தொலைத்தேன்
அன்பு தெய்வம் தேடி வந்தாரே - என்னை
அரவணைத்து அள்ளிச் சென்றாரே
பசும் புல்வெளியில் நடந்திடச் செய்தார்
பாசம் நேசம் பரிவும் தந்தார்
பாவ வழியை மட்டும் மறந்திடச் சொன்னார்

2. வானத்தையும் பூமியையும் அதில் வாழும்
உயிர்களையும் மனிதனையும் படைத்தவர் அவரே
உயர் மாண்புகளைத் தந்ததும் அவரே - 2
ஆண்டவர் எனக்கு அரணாய் உள்ளார்
ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தார்
திருடர்கள் எவரும் இந்த ஆட்டினைத் தீண்டார்
265. என் ஆயன் என் நேச ஆண்டவர்
என் ஆயன் என் நேச ஆண்டவர்
இனி எனக்கெந்த குறையுமில்லை
மனம் களைத்திடும் போதவர் அருகிருந்து
என்னுள் புதுஉயிர் ஊட்டுகின்றார் - 2

1. அன்புள்ள அவரின் இல்லத்திலே
ஆயுள் முழுதும் வாழ்ந்திருப்பேன் - 2

2. தீமைகள் எதற்கும் அச்சம் இல்லை
ஆண்டவர் என்னோ டிருப்பதனால் - 2

3. நேரிய வழியில் என்னை நடத்தி - தம்
திருப்பெயரை மகிமை செய்தார் - 2
266. என் ஆயனாம் என் இறைவன் இருக்கையிலே
என் ஆயனாம் என் இறைவன் இருக்கையிலே
எந்நாளுமே இனி பயம் ஏதும் எனக்கில்லையே
எந்நாளும் காப்பார் என் ஆயன் இயேசு
என் முன்னே வழிநடப்பார் - 2

1. பசும்புல் நிறைந்த நிலத்தில் என்னை அழைத்துச் செல்வார்
எந்தன் களைப்பை ஆற்றி என்னை மகிழச் செய்வார்
தாகம் தீர்க்கும் ஓடையில் - 2
என்னை அழைத்து தாகம் தணித்து என்றும் மகிழச் செய்வார்

2. இருளே சூழும் வேளை பயமே எனக்கு இல்லை
பாதை தவறினாலும் என்னைத் தூக்கிச் செல்வார்
அவரின் அன்பும் அருளுமே - 2
என்னைக் காக்கும் வாழ்வு வழங்கும் என்றும் உடனிருக்கும்
267. என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது
என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது - 2

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்
ஆகா என்றென்றும் இன்பமல்லவா - 2

2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே - 2
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா - 2

3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால் - 2
என்னுள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே - 2
268. என் ஆற்றலின் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
என் ஆற்றலின் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
திருவடி அமர்ந்திடுவேன் கவலைகள் மறந்திடுவேன் - 2

1. அரணும் கோட்டையும் அவர் தாமே
வலிமையும் துணையும் அவர் கரமே - 2
வாழ்வும் வளமையும் வழங்கிடுவார்
இடறும் வேளையில் காத்திடுவார் - 2
வாக்கு அழியவே விடுவதில்லை மானிடர் துயரில் மகிழ்வதில்லை
தோளில் தினமும் எனைச் சுமந்திடுவார்
தாயைப் போலத் தினம் காத்திடுவார் - என்

2. உமது பேரன்பைப் புகழ்ந்திடுவேன்
உமது நினைவினில் மகிழ்ந்திடுவேன் - 2
அடைக்கலம் உன்னில் கண்டிடுவேன்
சிறகுகள் நிழலில் அகமகிழ்வேன் - 2
கால்கள் சோர்ந்திட விடுவதில்லை
காத்திடும் கண்கள் அயர்வதில்லை
தேடி வந்து எனை மீட்டிடுவாய்
தேவைகள் யாவையும் தீர்த்து வைப்பாய் - என்

269. என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும்
என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும்
போற்றிடுவேன் - நல் அருள்மொழி கேட்க
காலமெல்லாம் அவர் காலடி அமர்ந்திடுவேன் - 2

1. ஆண்டவர் எனது அரணாவார்
அவரே எனக்கென்றும் துணையாவார் - 2
வலிமையும் வாழ்வும் வழங்கும் நல்தேவன்
என்னுடன் இருக்கின்றார் என்றும் இருக்கின்றார்

2. ஆண்டவர் எனது மீட்பராவார்
அவரே எனக்கென்றும் ஒளியாவார் - 2
வாழ்வாய் வழியாய் விளங்கும் நல்தேவன்
சீர்வழி நடத்திடுவார் அவர் வழி தொடர்ந்திடுவேன்
270. என் இறைவா என்னரசே
என் இறைவா என்னரசே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்
மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - 2 கலைமான்கள்

1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது
தகைவிலான் குஞ்சுக்குக் கூடும் கிடைத்தது -2
ஆனால் இறைவா என்னரசே - 2
எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது
எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்துள்ளது

2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும்
ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும் - 2
ஆனால் இறைவா என்னுயிரே - 2
நீயின்றி எனக்கு வாழ்வெங்குக் கிடைக்கும்
நீயின்றி எனக்கு வாழ்வு எங்குக் கிடைக்கும்
271. என் விளக்கு சுடர் விட்டு எரியச் செய்கின்றீர்
என் விளக்கு சுடர் விட்டு எரியச் செய்கின்றீர்
என் வாழ்வை அகல்விளக்காய் இறைவா மாற்றினீர் - 2

1. புனிதம் மிகுந்த இறைவன் பெயரை நாளும் புகழ்ந்து ஏத்துவேன்
புகழ்ச்சிப் பலியைப் பாக்களாலே நானும் இசைத்துப் பாடுவேன் 2
போற்றி இறைவா போற்றி என்று
நாளும் பொழுதும் வாழ்த்துவேன் - 2
அரணும் மீட்பும் எனக்கு நீரே சரணமே உன் திருப்பாதமே - 2

2. எனக்கு உமது துணையிருக்க எதிரிப் படையைத் தாக்குவேன்
எனக்கு உமது வலுவிருக்க எதிரிக் கோட்டையைத் தாண்டிடுவேன்
எனக்குக் கேடயம் நீரே இருக்க
எதிரிக் கணையைத் தடுத்திடுவேன் - 2
தாங்கும் வலிமை தாண்டும் வலிமை
தடுக்கும் வலிமை நீர் தந்த வளமை - 2
272. என்னுயிரே ஆண்டவரைப் போற்றிப் பாடிடு
என்னுயிரே ஆண்டவரைப் போற்றிப் பாடிடு ஆ
என்னுள்ளமே அவர் பெயரை ஏற்றிப் பாடிடு ஆ - 2
என் உயிருள்ள வரையில் நான் பாடுவேன்
எந்தக் காலமும் நேரமும் உன் புகழ் பாடியே
என்றென்றும் மகிழ்வேன்

1. ஆண்டவர் நல்லவர் ஆ சினங் கொள்ளாதிருப்பவர் ஆ
நம் பாவங்களுக்கேற்ப நடத்தமாட்டார்
நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் - 2
தமக்கஞ்சுவோர்க்குக் காட்டும் அன்பு உயர்ந்ததுவே
அது மண்ணினின்று விண்ணுலகம் உயர்ந்ததுவே
அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்
காற்றே கடலே நதியே அலையே இறைவன் புகழைப் பாடு
மலையே மலரே முகிலே மழையே தேவன் புகழைப்பாடு -2

2. பொறுமையும் அன்பும் ஆ கொண்டவர் அண்டவர் ஆ
அவர் நீதி நம் மீது இருக்கின்றதே
அவர் வாக்கு நம் வாழ்வில் நிலைக்கின்றதே - 2
அவர் ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வளிப்பார்
தம் செயல்களை அனைவரும் காண வைத்தார்
அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்
273. என்னைக் காக்கும் ஆண்டவர்க்கு
என்னைக் காக்கும் ஆண்டவர்க்கு
எந்நாளும் புகழ் இசைப்பேன்
என் உயிர் உள்ளவரை தேவனைத் துதித்திடுவேன் - 2

1. ஆயிரம் ஆயிரம் பகைவரெல்லாம்
சூழ்ந்தாலும் எனக்குப் பயமில்லையே
ஆகாயம் என் மேல் விழுந்தாலும்
ஆண்டவரே என்னைத் தாங்கிடுவீர் - 2
கோட்டையும் அரணும் நீர் இருக்க
குறைவின்றி நலமாய் நான் வாழ்வேன் - 2
மலைபோல் உறுதியாய் நின்றிடுவேன்
எதிரிகள் சிதறி ஓடிடுவார்

2. ஆண்டவரே உம்மை நம்பியுள்ளேன்
உமக்கு இன்னிசை முழங்கிடுவேன்
உம் சினம் நொடியில் மறைந்திடுமே
உம் கருணையும் அன்பும் நிலைத்திடுமே - 2
பெருமையும் புகழும் எனக்குத் தந்தீர்
கோட்டையும் அரணுமாய் எனைச் சூழ்ந்தீர் - 2
வார்த்தையில் தவறா என் இறைவா
அடைக்கலம் புகுந்தேன் உம்மிடமே
274. எனது ஆயனாய் இறைவன் இருக்கிறார்
எனது ஆயனாய் இறைவன் இருக்கிறார்
மனது மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறார்
இனி என் தேவை என்னவென்று நான் சொல்லக் கூடும்
அவரின் நன்மை இரக்கம் என்னை
வாழ்நாளெல்லாம் பின் தொடரும்

1. களைப்பினால் மிக வாடியே நான் சோர்ந்து போகையில்
இளைப்பாறச் செய்கிறார் பசுமை வெளிதனில்
சோதனையின் நெருப்பிலே நான் தாகங்கொள்கையில்
சேயெனையே நடத்துவார் குளிரோடை அருகினில் - 2
என்னென்று சொல்லுவேன் என் தேவன் அன்பினை
என்றென்றும் பாடுவேன் என் ஆயன் இயேசுவை - 2
இதிலும் வேறு பேரின்பம் எங்கு உண்டு சொல்லுங்கள்

2. இறப்பின் நிழலில் பள்ளதாக்கில் நடக்க நேர்கையில்
இறைவன் அருகில் இருப்பதால் அச்சமில்லையே
ஆயனவரின் வளைகோல் என்னை வழி நடத்துவதால்
ஆனந்தமே ஆனந்தமே எனது வாழ்விலே - 2 என்னென்று
275. ஓபீர் தங்க நகைகள் அணிந்து
ஓபீர் தங்க நகைகள் அணிந்து
உமது அரசி வலப்புறம் நிற்கின்றாள் - 2
பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டு
கதிரோனை ஆடையாய் அணிந்தவளாய்
பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டு
நிலவின் மேலே நிற்கின்றாள்

1. உமது அரசர் உன் பேரெழிலைக் கண்டு
உன்னை என்றும் விரும்பிடுவார் - 2
அவரே என்றும் உம் தலைவர் - 2
அவர்க்கென்றும் தலை வணங்கு

2. மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்
அவர்கள் அழைத்து வருகின்றனர் - 2
அனைவரும் அரசர் மாளிகையில் - 2
இதோ வந்து நுழைகின்றனர்
276. கடவுளேஉமதுபேரன்புஎத்துணைஅருமையாய்இருக்கின்றது
கடவுளேஉமதுபேரன்புஎத்துணைஅருமையாய்இருக்கின்றது
கனிவுமிகு உம் சிறகின் நிழல் நல் புகலிடமாய் அமைகின்றது
வாழ்வு தரும் ஊற்று - அது
உம்மிடமே உள்ளது
ஒளி தரும் உம் வார்த்தை - அது
எம்மிடம் ஒளிர்கின்றது

1. இறைவா உம் பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது - உம்
இல்லத்தின் செழுமைகளால் பூவுலகு நிறைகின்றது - 2
உம் வாக்குப் பிறழாமை மலை மழை முகில்களைத் தொடுகின்றது
ஆண்டவர் உம் நீதி - அது
உயர் மலைபோல் உள்ளது
உம் தீர்ப்பின் ஆழம் - அது
பெருங்கடல் போல் உள்ளது

2. மாந்தரையும் பல் உயிர்களையும் பாதுகாப்பவர் நீர் இறைவா
தாகத்தைத் தணிக்கின்ற வற்றாத நீரோடை நீர் இறைவா - 2
நேரிய நல் மனத்தோர்க்கு அறநெறி அருள்பவர் நீர் இறைவா
செருக்குடையோரின் கால் - என்னை
நசுக்கவே விட மாட்டீர்
பொல்லாதவரின் கை - என்னைப்
பிடிக்கவே விட மாட்டீர்
277. கடவுளை நாடித் தேடுவோரே - உங்கள்
கடவுளை நாடித் தேடுவோரே - உங்கள்
உள்ளம் ஊக்கம் அடைவதாக
இறைவன் அருளும் உயிர்மீட்பு
உலகின் படைப்புக்குப் பாதுகாப்பு
கடவுள் நாடித் தேடுவோமே - என்றும்
அவர்தம் மாட்சியைப் பாடுவோமே
துணை செய்வதில் அவர் மாறாதவர் - விண்
ணப்பத்துக்கு மறுமொழி தருகின்றவர்
படைகளின் ஆண்டவரே பாது காப்பவரே

1. காரணம் இல்லாமல் எனை வெறுப்போர் - பெரும்
பொய்க் குற்றம் சாட்டி வதைக்கின்றனர்
படு குழி பாழ் வெளி பழி இழிவு - எனக்
கொடுமைகள் விதைத்துச் சிதைக்கின்றனர்
தேடி நின்றேன் மன ஆறுதலை - எனைத்
தேற்றிடுவார் என யாரு மில்லை - உமை
நம்பினேன் போக்கும் என் அஞ்சுதலை - என்றும்
உம் அன்பு அருளுக்கு இணையில்லை

2. என் மதி கேடுகள் அறிந்தவரே - என்
தீவினை எல்லாம் தெரிந்தவரே
என் சிறை நெருக்கடி உணர்ந்தவரே - என்
வெட்கக் கேடும் மானக் கேடும் கண்டவரே
மனம் உடைந்து நான் வருந்தி நின்றேன் - இனி
மறைத் திடாதேயும் திரு முகத்தை - கடுஞ்
சினம் கொண்ட உம் விழி காண்கின்றேன் - என்
கறைகுறை களைந் தருளும் நலத்தை
278. கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில்
கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில்
எனக்குக் குறையேது - 2 அரணும் கோட்டையும் ஆனவரே - 2
அன்பின் தேவனாய் இருப்பவரே

1. இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும் - 2
வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்குக் கேடயமே - 2
உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - 2

2. எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது - 2
செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
தூதரை அனுப்பிடுவார் - 2
கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தித் தாங்கிடுவார் - 2
279. கலைமான்கள் நீரோடைத் தேடும் எந்தன் இதயம்
கலைமான்கள் நீரோடைத் தேடும் எந்தன் இதயம்
இறைவனை நாடும் உள்ளத்தாகம் உந்தன் மீது
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும்

1. காலம் தோன்றாப் பொழுதினிலே
கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2
உயிரைத் தந்திடும் கருவினிலே
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்
கதையின் நாயகன் நான் இன்று

2. பாறை அரணாய் இருப்பவரே
நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2
காலை மாலை அறியாமல்
கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2
சிதறிய மணிகளைக் கோர்த்து எடுத்தால்
அழகிய மணிமாலை நானாவேன்
280. கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல்
கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை - 2
ஏங்கியே நாடி வருகின்றது

1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2
இறைவா உன்னை என்று நான் காண்பேன்
கண்ணீரே எந்தன் உணவானது - 2

2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க
என் உள்ளம் பாகாய் வடிகின்றது - 2
281. கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே
கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே
அனுதின மேய்ச்சலுடன் அன்புடன் நடத்துகின்றார் - 2

1. அவர் என் ஆத்துமாவை ஞானத்தில் சேர்த்து
நீதியின் பாதைகளில் அவர் என்னை நடத்துகின்றார் - 2

2. மரணத்தின் பள்ளத்திலும் பயத்திலும் நடந்தாலும்
தேவன் நம்மோடிருப்பார் நன்மைகள் புரிந்திடுவார் - 2

3. எண்ணெயால் என் தலையை அன்புடன் அபிசேகம் செய்து
திருஅவை முன்பாகத் திருநிலைப்படுத்துகின்றார் - 2
282. சீயோனில் இறைவா உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே
சீயோனில் இறைவா உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே
அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும்
தகுதியே என்றும் தகுதியே

1. மண்ணுலகைத் தேடி வந்தீர் அதற்கு நிறைய மழை கொடுத்தீர்
ஆறுகள் நிரம்பச் செய்தீர் தானியங்கள் விளையச் செய்தீர் - 2
படைசால்கள் எல்லாம் தண்ணீர் ஓடச் செய்தீர்
மண்ணைப் பரம்படித்து மழையால் மிருதுவாக்கினீர்

2. முளைத்து வரும் விதையை ஆசீர்வதித்துக் காக்கின்றீர்
ஆண்டு முழுவதையும் கருணையாலே நிரப்புகின்றீர் - 2
நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துதே
பாலை மேய்ச்சல் நிலம் கொழுமை கொண்டு விளங்குதே
283. தாயின் மடியில் குழந்தை போலே என்றும் என் ஆன்மா
தாயின் மடியில் குழந்தை போலே என்றும் என் ஆன்மா
தாயின் மடியில் அமர்ந்தே இறைவா
அமைதி காண்கின்றேன் இறைவா வருகவே அமைதி தருகவே

1. ஆண்டவரே என் இதயம் இறுமாப்போ
கர்வமோ கொள்ளவில்லை - 2
ஆற்றலை மிஞ்சின காரியங்களை
நான் என்றும் தேடவில்லை - 2 நான் என்றும் தேடவில்லை
இறைவா வருகவே அமைதி தருகவே

2. மலைகள் சூழ்ந்த சீயோன்போல்
என்னை நீர் இறைவா சூழ்ந்துள்ளீர்
பாவிகள் அதிகாரம் நீதிமான்கள்மேல்
இனி என்றும் செல்லாது - 2 இனி என்றும் செல்லாது
இறைவா வருகவே அமைதி தருகவே
284. தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு - 2
தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு - 2

1. ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்
எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும்
எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்

2. என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்
கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்
ஏனெனில் நீர் எனக்குக் கற்பாறையாகவும்
அரணாகவும் இருக்கின்றீர் - ஏனெனில்
என் இறைவா நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கின்றேன்

3. ஆண்டவரே என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை
பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்
தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு
உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கின்றேன்
285. தூபம் போல் என் செபம் உம்மை நோக்கி எழும்பாதோ
தூபம் போல் என் செபம் உம்மை நோக்கி எழும்பாதோ
வானோக்கி எழும்பும் என் கரங்கள் பலியாகாதோ - 2

1. ஆண்டவரே உம்மை நோக்கிக் கூவுகின்றேன் அறியீரோ
எனக்குதவ விரைவீரே என் குரலைக் கேட்பீரே

2. நாவினுக்கு ஒரு காவல் ஏற்படுத்திக் கொடுப்பீரே
உதடுகளை விழிப்போடு காத்திடவே செய்வீரே

3. தீமையின்மேல் எனதுள்ளம் சேராமல் தடுப்பீரே
கொடுஞ் செயல்கள் அணுகாமல் நீர் என்னைக் காப்பீரே
286. நம்பினேன் ஆண்டவரே உம்மையே
நம்பினேன் ஆண்டவரே உம்மையே
சீயோன் மலை என்று நம்பினேன் - 2

1. எருசலேம் நகருக்கு மலைகள் உண்டு
எதிர்வரும் பகைவர்கள் பலியாவார் - 2
நல்லாரின் நாட்டில் பொல்லாங்கு மாறவும் - 2
அன்பார்ந்த ஆண்டவர் அரணாவார் - 2

2. நேரிய இதயம் நேர்கொண்ட பண்பை
சேர்த்திடும் போது சோர்வில்லை நமக்கு
கோணல் வழியில் நடப்போர் நிலைகுலைந்து போவார்
கானல் நீராய்க் கண்மறைந்து போவார்
287. நம்பினேன் ஆண்டவரை நம்பினேன்
நம்பினேன் ஆண்டவரை நம்பினேன்
அவர் எந்தன் கூக்குரலைக் கேட்டருளினார்

1. அழிவுதரும் குழியினின்று என்னைக் காத்திட்டார்
பாவத்தின் பிடியினின்று என்னை மீட்டிட்டார்
பாறையில் கால்களை ஊன்றச் செய்திட்டார்
பாசத்தோடு ஆண்டவர் என்னை நடத்திட்டார்

2. புதியதொரு புகழ்ப்பாடல் நான் பாடுவேன்
புனித நல்ல இறைவனிலே நம்பிக்கை வைப்பேன்
வியப்புமிக்க செயல்கள் பல எனக்கு அருளினார்
விருப்பமுடன் அவர் புகழை நான் பாடுவேன்
288. நம் மீட்பர் இயேசு உயிருடன் வாழுகின்றார்
நம் மீட்பர் இயேசு உயிருடன் வாழுகின்றார்
உன் அருகினிலே எப்போதும் இருக்கின்றார்
உனக்கு ஆசீர் வழங்கிடுவார் ஆசீர்வாதமாய் நீ இருப்பாய் - 2

1. உன் உயிர்த் தோழனாக உனது பக்கம் உடனிருப்பார்
உன் கால் இடறாமல் உனக்கு அவர் துணையிருப்பார் - 2
தீமைகள் உன்னை அணுகாது
வாதைகள் உன்னை நெருங்காது
கண்கள் கலங்கித் தவிக்காமல் கண்போல காலமெல்லாம்
உன்னைக் காத்திடுவார்

2. உன் கை வேலைகளில் உயர்ந்த பலன் உனக்களிப்பார்
உந்தன் கனவுகளை நனவாக்கி உதவிடுவார் - 2
உன்னைச் சூழ்ந்து அவர் இருப்பார்
உன்னைக் கைவிடவே மாட்டார்
உந்தன் துயரம் மகிழ்ச்சியாகும் உன் செபமும்
உன் சொந்தமும் உன்னில் தங்கிடுமே
289. நல்ல ஆயன் ஆண்டவர் நாளும் என்னை ஆள்பவர்
நல்ல ஆயன் ஆண்டவர் நாளும் என்னை ஆள்பவர்
ஆடுகளை வாழ வைக்க உயிர் கொடுக்கும் ஆயராம்
தவறும் ஆட்டைத் தேடுவார்
தோளில் சுமந்து பாடுவார் / ஆடுவார் - 2
ஏது குறை எந்தன் வாழ்விலே
ஏது பயம் எந்தன் நெஞ்சிலே
பெயர் சொல்லி அழைக்கின்றவர் - என்னை - 2

1. கடல் கடந்து செல்லும் போதும் தீ நடுவே நடக்கும் போதும்
கரம் பிடித்து வழிநடத்தும் ஆயன் நல்லவர்
இருள் நிறைந்த பாதையிலே இடறி விழும் பொழுதினிலே
திடமளித்து தோள் கொடுக்கும் ஆயன் வல்லவர்
எந்தன் மீட்பும் ஒளியுமாகிக் காக்கும் கோட்டை அரணுமாகி
மந்தைக்காக உயிர் கொடுப்பவர் - 2
நீர்நிலை அருகிலே நித்தமும் நடத்துவார்
நீதியின் வழியிலே அமைதியில் நடத்துவார்
கோலும் உமது நெடுங்கழியும் காலந்தோறும் காத்திடும்
தீமை கண்டு எதற்கும் அஞ்சிடேன்
ஆண்டவரே என் ஆயர் ஏது குறை எந்தன் வாழ்விலே - 2

2. பகல் வெளிச்சம் தாக்கிடாமல் இரவின் நிலா தீண்டிடாமல்
காத்துக் கொள்ளும் அன்பின் ஆயன் என்றும் வல்லவர்
நண்பர் கூட்டம் வெறுக்கும் போதும்
பகைவர் கூட்டம் சிரிக்கும் போதும்
அன்பர் இயேசு என்னை என்றும் நடத்திச் செல்லுவார்
என் தலையில் எண்ணைய் பூசி
வாழ்வின் கிண்ணம் நிரம்பச் செய்து
எனது பெயரை நிலைநிறுத்துவார் - 2
காரிருள் சூழலாம் கதவுகள் மூடலாம்
பழிகளால் வாடலாம் விழிகளும் மூடலாம்
அந்த நேரம் வந்து என்னைச் சொந்தமாக்கிக் கொண்டிடும்
இந்த அன்பு என்றும் போதுமே - 2
ஆண்டவரின் இல்லத்திலே ஆயுளெல்லாம் வாழ்ந்திருப்பேன் - 2
290. நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே - 2
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே - 2

1. ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ - 2
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் - 2
ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது
போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2

2. இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ - 2
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2
என்றென்றும் உன் ஆசி கொண்டு - வரும்
நல்வாழ்வைக் கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே - 2
291. நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே

1. நீ வரும் நாளில் அமைதி வரும் - உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம் விலகும் - உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையால் சாய்வதில்லை - என்
ஆற்றலும் வலிமையும் நீயாக - 2

2. விடியலைத் தேடிடும் விழிகளிலே - புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால் நினைந்தூட்டும் தாயும் நீ - என்
பாழ்வெளிப் பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தெனை ஆள்பவன் நீ - என்
மீட்பரும் நேசரும் நீயாகும் - 2
292. நீ போகும்போதும் காப்பார் வரும்போதும் காப்பார்
நீ போகும்போதும் காப்பார் வரும்போதும் காப்பார்
இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார் (இயேசு) - 2

1. உனக்குதவி ஆண்டவரிடம் இருந்து வரும்
வானமும் வையமும் படைத்தவர் அவரே - 2
உன் கால்கள் இடறவே விடமாட்டார் - 2
உன்னைக் காக்கும் தேவன் அவர் உறங்கிடமாட்டார் - 2

2. இசுராயேலைக் காக்கும் தேவன் அயர்வதில்லை
உன்னைக் காக்கும் தேவன் அவர் உறங்குவதில்லை -2
தீமையெல்லாம் விலக்கி உம்மைக் காத்திடுவார் - 2
உன் வலப்புறத்தில் அமர்ந்து உம்மைப் பாதுகாக்கிறார் - 2
293. நீரோடை தேடும் கலைமானைப் போல
நீரோடை தேடும் கலைமானைப் போல
தெய்வமே உமக்காய் ஏங்குகின்றேன் - 2
நெஞ்சம் உமக்காகத் தவிக்கின்றது - உம்
நேசத்தில் தாகம் கொண்டுள்ளது - 2

1. இரவும் பகலும் கண்ணீர்தான் இறைவா எனது உணவானது - 2
உன் இறைவன் எங்கே என்று கேட்கின்றனர்
உளம் நொந்து வந்தேன் உமைத்தேடியே

2. மக்கள் கூடும் விழாவினில்
மகிழ்வின்றிக் கவலையுடன் கலந்தேனே - 2
என் நெஞ்சின் நம்பிக்கை நாதம் நீர்தாமே
எங்கே நான் போவேன் உம்மிடமிருந்து
294. நெஞ்சமே நீ விழித்தெழு வீணையே விழித்தெழு
நெஞ்சமே நீ விழித்தெழு வீணையே விழித்தெழு
நீதியின் இறைவனை நாதத்தின் தலைவனைப்
புகழ்ந்து நான் இசைத்திட பொழுதுமே விடிந்திட

1. வான்வரை உயர்ந்தது வல்லமை நிறைந்தது
இறைவனின் பேரிரக்கம்
மேகங்கள் வரையில் மேன்மையாய் நிற்கும்
மேலவன் சொல்வன்மை
விண்ணகம் அவர் அரியணையே மண்ணகம்
அவர் கால்மனையே - 2

2. விடுதலை தேடிடும் அடிமைகள் எவர்க்கும் வலக்கரம் நீட்டிடுவார்
எதிரிகள் வலையில் விழுந்து விடாமல்
என்றுமே காத்திடுவார் மனிதர் உதவி வீழ்ந்தாலே
கடவுள் துணையில் செல்வேனே - 2
295. நெஞ்சார ஆண்டவர்க்கு நன்றி சொல்லுவோம்
நெஞ்சார ஆண்டவர்க்கு நன்றி சொல்லுவோம்
நெஞ்சம் நெகிழ நன்மைகள் நமக்குச் செய்ததால் - 2

1. ஆண்டவரின் செயல்கள் உயர்ந்து நிற்பவை
அவற்றில் இன்பம் காண்பதே நமது பெருமை - 2
அவர் செய்த நன்மையெல்லாம் மேன்மையானவை
ஆய்ந்து நோக்கின் அவை யாவும் அன்பின் வலிமை

2. இரக்க உணர்வு மிகுந்தவர் நமது ஆண்டவர்
இடைவிடாது நம்மைத் தமது நினைவில் கொண்டவர் - 2
இனியவரான அவர் நம்மால் நம்பத் தகுந்தவர்
இணையில்லாக் கருணையால் இதயம் சுமப்பவர்
296. நெஞ்சார ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
நெஞ்சார ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன் - 2

1. ஆண்டவர் செயல்கள் மகத்தானவை
இன்பம் அவற்றில் கொள்வோர் உய்த்துணர்வார் - 2
மாண்புமிக்க அவர் தம் செயல் யாவும்
என்றும் மலைபோல் அவர் தம் நீதி நிலைக்கும்

2. வியத்தகு செயல்கள் நினைவினிலே
என்றும் விளங்கிட அவரே செய்தாரே - 2
தயவுடன் அன்பும் உள்ளவரே - அவர்
தமக்கஞ்சும் மனிதர்க்கு உணவளித்தார்
297. நெஞ்சே ஆண்டவரைப் போற்று உயிரே உள்ளவும் போற்று
நெஞ்சே ஆண்டவரைப் போற்று உயிரே உள்ளவும் போற்று
உன்னை மீட்க இயலா மானிடரை வீணே நீ நம்புவது - 2

1. ஒடுக்கப்பட்டோர்க்கென நீதியை நாட்டுபவர்
பசித்திருப்போர்க்கென உணவினைக் கொடுக்கின்றவர் - 2
சிறைப்பட்டவர் மீளச் செய்தார்
விழி அற்றவர் காணச் செய்தார்
அவரே உன் கடவுள் என்றென்றும் ஆட்சி செய்வார்

2. நீதியுள்ளோரிடம் பேரன்பு கொண்டுள்ளவர்
அயல் நாட்டவருக்கும் அடைக்கலமாயுள்ளவர் - 2
அனாதையை ஆதரிப்பவர்
பொல்லாரை வீழ்த்துகின்றவர்
அவரே உன் கடவுள் என்றென்றும் ஆட்சி செய்வார்
298. நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2
நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2
நெஞ்சம் நிறை படைப்புக்கள்
இறைவனில் தஞ்சம் கொண்டு வாழும் - 2 பெருமை எண்ணியே

1. அலைகடல் வான்முகில் மலையழகே
ஆண்டவன் புகழைப் பாடுங்களே
அலைந்திடும் மனத்தை நிலையாய் நிறுத்தி
மன்னவன் பெருமை கூறுங்களே

2. ஒளியைப் போர்வையாய்க் கூடாரமாய் - வான்
வெளியை விரித்து விளங்குகின்றீர் - 2
மேகங்கள் நீர் வரும் தேரா - ஓடும்
வெள்ளங்கள் உம் உறைவிடமோ - 2
உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே - 2
299. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக - என்
அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே

2. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கின்றார்
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்
உன் உயிரை அழிவினின்று மீட்கின்றார்
அருளையும் இரக்கத்தையும் உனக்கு முடியாகச் சூட்டுகின்றார்
300. நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு
நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு
தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு
வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்
எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசை பாடிடு

1. நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்
கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்
கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்
கலகம் புரிந்தோரைக் கலங்கிடச் செய்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

2. அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே
ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே
வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்
தாங்கிடும் தாயாய்த் தனைத் தந்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு
301. படைகளின் ஆண்டவரே உமது இல்லம் அழகானது
படைகளின் ஆண்டவரே உமது இல்லம் அழகானது
உமது இல்லமே அழகானது - 2 படைகளின் ஆண்டவரே

1. உமது இல்லத்திலே தங்கிடுவோர் என்றும்
உண்மையில் பேறுபெற்றோர் - 2
எந்நாளும் உம்மையே புகழ்வார்கள் - 2
உமது பேரன்பை எண்ணி மகிழ்வார்கள்

2. வேறிடத்தில் நான் வாழ்வதிலும் உமது ஆலயம் மேலானது - 2
அருளும் மேன்மையும் அளிப்பவரே - 2
உமது உறைவிடம் எனக்குப் புகலிடமே
302. படைகளின் ஆண்டவரே
படைகளின் ஆண்டவரே
உமது உறைவிடம் எத்துணை அருமையானது - 2

1. படைகளின் ஆண்டவரே (வான்) படைகளின் ஆண்டவரே
உமது பீடத்தில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்தது
சிட்டுக் குருவிக்குக் கூடு கிடைத்தது - 2

2. படைகளின் ஆண்டவரே (வான்) படைகளின் ஆண்டவரே
உமது இல்லத்தில் வாழ்வோர் பேறுபெற்றோர்
எந்நாளும் உம்மைப் புகழ்வர் - 2

3. படைகளின் ஆண்டவரே (வான்) படைகளின் ஆண்டவரே
உமது இல்லத்தில் ஒரு நாள் நான் வாழ்வது
எவ்வளவோ மேலானது - 2
303. படைப்புகளே நம் ஆண்டவரை
படைப்புகளே நம் ஆண்டவரைப்
பாடுங்களே நீங்கள் பாடுங்களே - 2
அருஞ்செயல் எனக்கு அவர் செய்தார்
ஆனந்தமே என்னில் ஆனந்தமே

1. அன்பீந்தார் அருளீந்தார் பண்பும் பணிவும் அவரளித்தார் - 2
யார் என்னைக்கைவிடினும்ஆண்டவர் என்னை அழைக்கின்றார்- 2
இறைவனின் அன்பினுக்கு இந்த உலகினில் உவமையுண்டோ

2. மனம் கலங்கி பரிதவித்தேன் நிம்மதி மனத்தில் எனக்களித்தார் - 2
மாசுடன் நான் நிற்கையிலே மன்னிப்பு எனக்கு அவரளித்தார் - 2
இறைவனின் அன்பினுக்கு இந்த உலகினில் உவமையுண்டோ
304. பாடுங்கள் ஆண்டவர்க்குப் புதியதோர் பாடல் பாடுங்கள்
பாடுங்கள் ஆண்டவர்க்குப் புதியதோர் பாடல் பாடுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4

1. ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
மாண்புயர் வான் மண்டலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

2. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

3. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
நரம்பிசைத்து குழலூதி அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
305. பாதுகாக்கும் மீட்பரே என் பாறையான இயேசுவே
பாதுகாக்கும் மீட்பரே என் பாறையான இயேசுவே - 2
கேடயமும் தந்தன தானா புகலிடமும் தந்தன தானா - 2
வாழ்வில் எல்லா வளங்களையும் வாரி வழங்கும் இறைவனே

1. செழித்து வளரும் செடிகள் போல இளைஞர் வளரட்டும்
செதுக்கிய சிலைகள்போல் பிள்ளைகள் வளரட்டும் - 2
பசியில்லா நிலையாலே வாழ்வு ஓங்கட்டும் - 2
எங்கள் வாழ்வு தங்கமாகும் உம் வாக்கால் - 2

2. வகை வகையாய் தானியங்கள் எமக்குக் கிடைக்கட்டும்
உம்மருளால் களஞ்சியங்கள் நிரம்பி வழியட்டும் - 2
ஆடுகளும் மாடுகளும் நன்றாய் இருக்கட்டும் - 2
எங்கள் வாழ்வு தங்கமாகும் உம் வாக்கால் - 2
306. பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை
பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை - 2

1. உவகை நிறைந்த உள்ளத்தினால்
உன்னத இறைவன் தாள்ப் பணிவீர் - 2
திவ்வியமாம் அவர் சந்நிதியில் தீங்குரல் எழுப்பிப் பாடிடுவீர்

2. ஆண்டவர் அவரே நம் இறைவன்
அவரே நம்மைப் படைத்தாரே - 2
நாம் அவர் மந்தையின் ஆடுகளாம்
நாம் என்றும் அவரின் பிள்ளைகளாம்
307. பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம்நீங்கிப் போகும்
பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம்நீங்கிப் போகும்
பரமன் இயேசு பார்வையினாலே
நெஞ்சமெல்லாம் இனிமையாகும்
நினைத்ததெல்லாம் நிறைவேறும்
நம் இயேசு வார்த்தையினாலே - 2
நம் தேவன் நல்லவரே நம் தேவன் வல்லவரே

1. ஆண்டவரை மனத்தில் வைத்து
அனைத்தையும் நாம் செய்யும் போது
பாதைகளை அவர் செம்மையாக்குவார் - 2
அவரை நோக்கிப் பார்த்தவர்கள் அவமானம் அடைவதில்லை - 2
ஆயிரமாய் ஆசீர் பெறுவார் ஆனந்தம் அடைந்திடுவார்

2. திராட்சைச் செடியின் கிளை போல
இயேசுவோடு இணைந்திருப்போம்
பலன் தருவோம் நலன்கள் பெறுவோம் - 2
என்ன குறை இருந்தாலும் அவரோடு நாம் இருந்தால் - 2
எல்லாமே நிறைவாகுமே நம் வாழ்வெல்லாம் மகிழ்வாகுமே
308. போற்றுங்கள் ஆண்டவர் பொன்னடி மலரைப்
போற்றுங்கள் ஆண்டவர் பொன்னடி மலரைப்
பொழியு மவர் கருணையை நிதம் புகழ்ந்து
போற்றுங்கள் ஆண்டவரை

1. எல்லையில்லாத புகழுடைமை என்றும் இறைவன் தனியுடைமை
தொல்லைகள் நீங்கிடச் செய்யுமருமை
தொடர்ந்து மகிழ்ந்தருள தொழுது புகழ்ந்திடவே

2. படைப்புகள் யாவும் பயனுடனே பாடுதே இறைவனைப் பரிவுடனே
ஈடில் விளங்கும் இறைவனையே
இனிது இசை முழங்கி இறைமை மணம் கமழ
309. போற்றுங்கள் போற்றுங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள்
போற்றுங்கள் போற்றுங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள்
வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள் அவர் திருப்பெயரை வாழ்த்துங்கள்
நல்லவர் நம்பத் தகுந்தவர் - அவர்
வல்லவர் நம்மை வாழ்விப்பவர் - போற்றுங்கள்

1. பாவங்கள் மன்னித்து பழிதனை விலக்கினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
பாசம் பொங்க வாரி அணைத்து பரிவோடு நம்மைத் தாங்கினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
அவர் தரும் மீட்பினையே நாள்தோறும் அறிவியுங்கள்
மக்களினம் அனைவருக்கும் - அவர்
மாண்பினைச் சொல்லிடுங்கள் - போற்றுங்கள்

2. சாவின் பிடிதனை விடுவித்துக் காத்திட்டார்
போற்றுங்கள் போற்றுங்கள்
நேசம் நிறைந்த வார்த்தைகளாலே நெருக்கடியில் தேற்றினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
வியத்தகு செயல்களையே நிறைவேறச் சொல்லிடுங்கள் - 2
தெய்வங்கள் அனைத்திலுமே - இவர்
சிறந்தவர் என்றிடுங்கள் - போற்றுங்கள் - 2
310. போற்றுவேன் ஆண்டவா உம்மை
போற்றுவேன் ஆண்டவா உம்மை
மனதாரப் போற்றிடுவேன் (நான்) - 2
மாட்சிமைநிறைந்தமன்னவன் நீஆட்சியும் அரசும்உள்ளவன் நீ - 2

1. பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியினிலும்
உந்தன் வலிமையும் உறுதியும் உண்டு
தீயவரின் தோல்வியிலும் பகைவர்களின் வீழ்ச்சியிலும்
உந்தன் மேன்மையும் நீதியும் உண்டு

2. வானத்திலே வெண்ணிலவை விண்மீன்களை அமைத்தீரே
மனிதனுக்காக அமைத்தீரே
பூமியிலே பறவைகளை விலங்கினத்தைப் படைத்தீரே
மனிதன் ஆண்டிட அழைத்தீரே
311. மகிழ்ச்சியினால் பாடுவாய் ஏனெனில் ஆண்டவர்
மகிழ்ச்சியினால் பாடுவாய் ஏனெனில் ஆண்டவர் உன் நடுவிலே மேன்மையோடு விளங்குகின்றார் - 2 1. ஆண்டவர் தாமே என் மீட்பரானார் அவர் மேல் நம்பிக்கை வைக்கின்றேன் ஆண்டவரே என் வலிமையானார் அவரையே நான் இன்று பாடிடுவேன் ஏனெனில் ஆண்டவர் எனக்கு இன்றும் மீட்பராய் விளங்குகின்றார் 2. ஆண்டவரை என்றும் போற்றிடுங்கள் அவர் பெயரை என்றும் புகழ்ந்திடுங்கள் ஆண்டவர் அவர் என சாற்றிடுங்கள் அவருக்கு நன்றிகூறிடுங்கள் ஏனெனில் வியத்தகு செயல்களையும் செய்துன்னை மீட்டவராம்
312. மாநிலத்தோரே நீங்கள் அனைவரும்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும்
மாண்புமிகு இறைவன் முன் ஆர்ப்பரியுங்கள் - அவர்
மாண்புகழை எங்கணுமே விளங்கச் செய்யுங்கள்

1. உம் செயல்கள் எத்தனையோ வியப்புக்குரியவை
உம் வல்லமை தனைக் கண்டு பகைவர் பணிகின்றார்
உம்மை வணங்கி மாநிலமே புகழ்ந்து பாடட்டும்
உமது பெயரின் புகழ் தனையே எங்கும் கூறட்டும்

2. மக்களெல்லாம் அவர் புகழை வாழ்த்திக் கூறுங்கள்
மகத்தான அவர் புகழை எடுத்துச் சொல்லுங்கள்
தக்க விதமே நம்மை வாழ வைக்கும் இறைவனவர்
தடுமாறவே விட்டதில்லை நமது கால்களை
313. மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்
மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - கலை - 2

1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது
தகைவிலான் குஞ்சுக்குக் கூடும் கிடைத்தது - 2
ஆனால் இறைவா எம் அரசே - 2
எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது
எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்துள்ளது

2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும்
ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும் - 2
ஆனால் இறைவா என் உயிரே
நீயின்றி எனக்கு வாழ்வெங்குக் கிடைக்கும்
நீயின்றி எனக்கு வாழ்வு எங்குக் கிடைக்கும்
314. மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தை எடுத்து
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தை எடுத்து
ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்

1. மிக மிகத் துன்புறுகின்றேன் என்று சொன்ன போதும் கூட
நான் ஆண்டவரை நம்பினேன்
எந்த மனிதனும் நம்பிக்கைக் குரியவனல்ல
என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்

2. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் என்ன கைம்மாறு செய்வேன்
மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையிலே எடுத்து
ஆண்டவருடைய திருப்பெரைச் சொல்லிக் கூப்பிடுவேன்
315. மூவுலகங்களின் ஆண்டவரே
மூவுலகங்களின் ஆண்டவரே
உமது உறைவிடம் எத்துணை இனிமையானது - 2

1. இறைவா உமது இல்லம் நாடி எனது ஆன்மா ஏங்குகின்றது -2
இறைவனின் புகழை என் உள்ளமும் உடலும்
என்றுமே பாடி மகிழ்கின்றது

2. பறவை வாழக் கூடு உண்டு இறைவன் பீடம் எனக்கு உண்டு - 2
இறைவனின் வீட்டில் இன்னிசைப் பாடி
என்றுமே வாழ்வோர் பேறுபெற்றோர்
316. யாக்கோபின் இறைவனைப் புகழந்திடுங்கள்
யாக்கோபின் இறைவனைப் புகழந்திடுங்கள்
நம் மீட்பின் கருவி அவர்
யாழினால் அவரது புகழ் பாடுங்கள் - எங்கும்
அவரின் பெயர் விளங்க - 2

1. நீதியும் நேர்மையும் என்றும் அவரது விருப்பமாமே
வானமும் பூமியும் எங்கும் அவர் அருளால் நிறைந்துள்ளது - 2
பூவுலகெல்லாமே புவிமாந்தர் அனைவருமே
இறைவனின் கைவண்ணமே - 2

2. இயேசுவின் திருப்பெயர் என்றும் மகிழ்வு தருகின்றது
இறைவனின் இரக்கம் எங்கும் அரணாய் இருக்கின்றது - 2
அவரில் நம்பிக்கை கொள்வோர் யாவரும்
வெற்றி பெறுகின்றனர் - 2
317. யாழிசைத்து ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
யாழிசைத்து ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
மகிழ்ச்சிக் குரல் எழுப்பிப் புதுப்பாடல் பாடுங்கள் - 2
நீதிமான்களே அவரில் களிகூருங்கள் - 2
நேர்மையுள்ளோர் என்றும் அவரில் மகிழுங்கள்
ஆண்டவரின் வாக்குகள் நேர்மையாக உள்ளன
அவருடைய செயலெல்லாம் நம்பிக்கைக்குரியன - 2

1. கடல்நீரைக் குவியல்போல் சேமித்து வைத்தாரே
மண்ணுலகைப் பேரன்பால் நிறைத்துக் கொண்டாரே - 2
ஆண்டவரின் வாக்கினால் வானங்கள் உண்டாயின
அவர் சொல்லின் ஆற்றலால் கோள்கள் உருவாயின
அனைத்துலகும் ஆண்டவர்க்கு அஞ்சி நடப்பதாக
அவர் தேர்ந்த மக்களினம் பேறுபெறுவதாக

2. ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்
அவர் உள்ளத் திட்டங்களோ தலைமுறையாய் நீடிக்கும் - 2
ஆண்டவரை நம்புவோர்க்கு அவரே துணை கேடயம்
அவருக்கஞ்சி வாழ்வோர்க்கு அவர் அன்புக் காவியம்
தீயோரின் திட்டங்களை முறியடிக்கின்றார் - நல்
மாந்தர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றார்
318. வாருங்கள் ஆண்டவர் புகழ்தனைப் பாடுங்கள்
வாருங்கள் ஆண்டவர் புகழ்தனைப் பாடுங்கள்
மீட்பின் பாறையவர் ஆர்ப்பரித்துப் போற்றுங்கள்
நன்றிகள் செலுத்துங்கள் திருமுன் வாருங்கள் - 2
பாக்களால் பாராட்டிப் பாடுங்கள் கூக்குரலிடுங்கள்
ஏனெனில் அவர் மாண்பு மிகுந்தவர் தெய்வங்களின் அரசர்

1. பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர் கையிலே உள்ளன
மலைகளின் கொடுமுடிகள் உரிமையிலே கொண்டவர் - 2
கடல்தனைப் படைத்தது அவர்தானே கரை உருவானது அவராலே
பணிவோம் தொழுவோம் வாருங்கள்
முழந்தாளிடுவோம் வாருங்கள்

2. ஆயனவர் பேணிக் காக்கும் மேய்ச்சலின் ஆடுகள் நாம்
நாம் அவர்க்குச் செவி சாய்த்தால் எத்துணை நலமாகும் - 2
மெரிபாவில் மாசாவில் செய்ததுபோல்
சோதிக்க வேண்டாம் ஆண்டவரை - பணிவோம்
319. வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்
வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள் - 2
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
மீட்பரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
அல்லேலூயா ஆமென் ஆகா அல்லேலூயா ஆமென் - 2

1. நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்
புகழ்ப்பாடலுடன் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம் - 2
ஏனெனில் ஆண்டவரே - 2 மாண்புமிகு இறைவன்
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர் - 2 அல்லேலூயா

2. தாள்ப்பணிந்து அவரைத் தொழுதிடுவோம்
முழந்தாளிடுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் - 2
அவரே நம் கடவுள் - 2 நாமோ அவர் மக்கள்
ஆடுகள் நம்மைக் காத்திடும் இறைவனவர் - 2 அல்லேலூயா
320. வான் படைகளின் ஆண்டவரே
வான் படைகளின் ஆண்டவரே
உமது இல்லம் எத்துணை அருமையாய் உள்ளது

1. என் ஆன்மா ஆண்டவருடைய ஆலய முற்றங்களை
விரும்பித் தேடிச் சோர்ந்து போகின்றது
என் உள்ளமும் உடலும்
உயிருள்ள இறைவனை நினைத்துக் களிகூர்கின்றன

2. அடைக்கலான் குருவிக்கு வீடும் தகைவிலான் குருவிக்குத்
தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கிடைத்தது
சேனைகளின் ஆண்டவரே என் அரசே என் இறைவா
உம் பீடங்களுள்ள இடத்திலே கிடைத்தது
226. ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு
ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு
யாருக்கு நான் அஞ்ச வேண்டும்
யாருக்கு நான் நடுங்க வேண்டும்

1. ஆண்டவரிடம் நான் வேண்டுவதும் விரும்புவதும் ஒன்றே
ஆண்டவருடைய இல்லத்தில் நான்
வாழ்நாள் முழுவதும் குடியிருக்க வேண்டும்

2. ஆண்டவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேன்
அவரது அன்பில் மூழ்கிவிட்டேன்
பகைவரை மன்னித்து வாழ்ந்திடுவேன்
பரமனின் அரசில் அமர்ந்து மகிழ்ந்திடுவேன்
237. ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்
ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்
ஆண்டவராம் உந்தன் இறைவனையும்
ஏனெனில் அவரே பெரியவரே அழகின் மகத்துவம் நிறைந்தவரே

1. வானத்தின் விரிவே கூடாரம் மேகங்கள் அவர் வரும் ரதமாகும்
ஒளியே அவரது ஆடைகளாம் - அங்குச்
சுடர்விடும் நெருப்பவர் தூதர்களாம் - அதனால்

2. பூமியின் படைப் பவர் எழில் முகமாம்
ஆழ்கடல் அமைப்பும் அவர் செயலாம்
கனலும் நீரும் அவர்க்கடங்கும் - அந்தக்
கதிதரும் காற்றும் அவர்க்கடங்கும் - அதனால்
240. ஆவலுடன் நான் ஆண்டவர்க்காகக் காத்திருந்தேன்
ஆவலுடன் நான் ஆண்டவர்க்காகக் காத்திருந்தேன்
அவரும் என்னைக் கனிவாகக் கண்ணோக்கினார் - 2

1. என் குரலுக்கு அவர் செவிகொடுத்தார்
எழுந்திட எனக்கவர் கைகொடுத்தார்
பாறையில் கால்களை ஊன்றச் செய்தார்
பாதையில் துணை வரும் காவலானார்

2. நாளும் இறைபுகழ் இசைத்திடவே நாவில் வைத்தார் புதுப்பாடல்
கண்டு கலங்கிய அனைவருமே கடவுளை நம்பி மகிழ்வுற்றார்

3. உம்மைத் தேடும் அனைவரையும்
அன்பில் வேரூன்றி நிற்கச் செய்யும்
விடுதலை வழங்கும் துணை நீரே விரைவாய் இறைவா வருவீரே
242. இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன் - 2

1. தம் சிறகுகளால் உன்னை மூடிக் காப்பார்
அவருடைய இறக்கைகளுக்கடியில் நீ அடைக்கலம் புகுவாய்
தவறாத அவருடைய வார்த்தை உனக்குக்
கேடயமும் கவசமும் போல் இருக்கும்

2. தீமை உன்னை அணுகாது
துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது
ஏனெனில் நீ செல்லும் இடங்களில் எல்லாம்
உன்னைக் காக்கும்படி தூதருக்கு
உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்